Newsஉலகையே உலுக்கிய ஸ்பெயின் வெள்ளம் - பலியானோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது

உலகையே உலுக்கிய ஸ்பெயின் வெள்ளம் – பலியானோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது

-

ஸ்பெயினில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 1200 மீட்பு அதிகாரிகள் ஏற்கனவே ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

10,000க்கும் மேற்பட்ட நிவாரணப் பிரிவுகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸும் இணைந்துள்ளதோடு , தேவையான நிவாரணப் பணிகளை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், வளர்ந்த ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், வெள்ளம் ஏற்படும் முன், அதுகுறித்து மக்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்காதது கவலையளிக்கிறது.

கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணக்கீடுகள் தொடங்கியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...