Newsகழிப்பறையில் அதிக நேரத்தை வீணடிக்கும் நபர்களே உஷார்...!

கழிப்பறையில் அதிக நேரத்தை வீணடிக்கும் நபர்களே உஷார்…!

-

நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்து நேரத்தை செலவிடுவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் மூல நோய் மற்றும் இடுப்பு தசை பலவீனம் ஏற்படும் என அமெரிக்க பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் Lie Xue குறிப்பிட்டுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள Stony Brook Medicine உதவி பேராசிரியர் Farah Monzur, ஒரு மனிதன் 5 முதல் 10 நிமிடங்கள் கழிப்பறையில் செலவிட வேண்டும் என்று கூறினார்.

ஆனால், அதிக நேரம் கழிவறையில் அமர்ந்திருப்பதை நிறுத்தும் வகையில், போன், பத்திரிக்கை, புத்தகங்களை கழிப்பறைக்கு எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

உடல் வேலைகள் சரியாக செய்யப்படாவிட்டால், 10 நிமிடங்களுக்குப் பிறகு கழிவறையில் இருந்து எழுந்து சிறிது நேரம் சுற்றித் திரிவது நல்லது என்றும் அது எளிதாகிவிடும் என்றும் டாக்டர் லீ க்யூ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதும் , தினமும் 2.7 முதல் 3.7 லிட்டர் தண்ணீர் அருந்துவதும் உடல் நன்றாக செயல்பட பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

ஆனால் மலச்சிக்கல் மோசமடைவதும், அதிக நேரம் கழிப்பறையில் இருப்பதும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் ஊகிக்கின்றனர்.

மலச்சிக்கலின் அறிகுறிகள் தொடர்ந்தாலோ அல்லது மூன்று வாரங்களுக்குள் கழிவறையில் அதிக நேரம் அமர்ந்திருந்தாலோ மருத்துவரை அணுகுவது நல்லது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...