NewsTattoos குத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்

Tattoos குத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்

-

விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் கழுத்தின் பின்புறம் மற்றும் கைகளில் பச்சை குத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.

முன்னர் அவர்கள் தமது கடமைகளின் போது உத்தியோகபூர்வ ஆடைகளால் மறைக்கக்கூடிய இடங்களில் மட்டுமே பச்சை குத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய விதிகளின் மூலம், பச்சை குத்தியதால் நேர்காணலில் இருந்து நிராகரிக்கப்பட்ட 86 விண்ணப்பதாரர்களை மறுபரிசீலனை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மாத்திரம் பொலிஸ் சேவை மற்றும் பாதுகாப்பு சேவையில் சேர விண்ணப்பித்த 135 பரீட்சார்த்திகள் பச்சை குத்தியதன் காரணமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநில காவல்துறை சேவையில் தற்போது 1000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த புதிய சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், முகம், கழுத்தின் முன்பகுதி மற்றும் தலையில் பச்சை குத்துவதற்கு இனி அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...