NewsTattoos குத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்

Tattoos குத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்

-

விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் கழுத்தின் பின்புறம் மற்றும் கைகளில் பச்சை குத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.

முன்னர் அவர்கள் தமது கடமைகளின் போது உத்தியோகபூர்வ ஆடைகளால் மறைக்கக்கூடிய இடங்களில் மட்டுமே பச்சை குத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய விதிகளின் மூலம், பச்சை குத்தியதால் நேர்காணலில் இருந்து நிராகரிக்கப்பட்ட 86 விண்ணப்பதாரர்களை மறுபரிசீலனை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மாத்திரம் பொலிஸ் சேவை மற்றும் பாதுகாப்பு சேவையில் சேர விண்ணப்பித்த 135 பரீட்சார்த்திகள் பச்சை குத்தியதன் காரணமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநில காவல்துறை சேவையில் தற்போது 1000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த புதிய சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், முகம், கழுத்தின் முன்பகுதி மற்றும் தலையில் பச்சை குத்துவதற்கு இனி அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...