Newsலெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

-

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பெய்ரூட் விமான நிலையத்தின் அருகே இஸ்ரேல் இராணுவம் இன்று (நவ. 14) நடத்திய வான்வழித் தாக்குதலில் அப்பகுதிகளில் இருந்த கட்டடங்கள் தரமட்டமாகின.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களுக்குச் சொந்தமான இடங்களைச் சுற்றியுள்ள மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்திருந்தது.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே,

ஹிஸ்புல்லா குழுக்களுக்குச் சொந்தமான இடங்களுக்கு அருகே இருப்பவர்கள் கவனத்திற்கு, கூடிய விரைவில் அப்பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கவுள்ளது எனக் குறிப்பிட்டு, வரைபடத்தில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களையும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தெற்கு பெய்ரூட் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

பெய்ரூட் விமான நிலையம் அருகே ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதிகளில் இருந்த கட்டடங்கள் முழுவதுமாக சேதமடைந்தன.

ஓடுபாதைகளில் விமானங்கள் சென்றுக்கொண்டிருக்கும்போதே ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இதில் விமானங்கள் அவசரமாகத் திருப்பப்பட்டன. சுற்றியிருந்த கட்டடங்கள் முழுவதுமாக தரைமட்டமாகின.

பெய்ரூட்டில் இஸ்ரேல் எல்லையிலிருந்து 3 கி.மீ. சுற்றளவிலுள்ள கட்டடங்கள் முழுவதுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் மக்களுக்கு எதிரான ஹிஸ்புல்லாக்களின் மறைமுகத் தாக்குதலைத் தகர்க்கும் நோக்கத்தில் இஸ்ரேல் ராணுவம் இதனைச் செய்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...