Newsலெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

-

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பெய்ரூட் விமான நிலையத்தின் அருகே இஸ்ரேல் இராணுவம் இன்று (நவ. 14) நடத்திய வான்வழித் தாக்குதலில் அப்பகுதிகளில் இருந்த கட்டடங்கள் தரமட்டமாகின.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களுக்குச் சொந்தமான இடங்களைச் சுற்றியுள்ள மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்திருந்தது.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே,

ஹிஸ்புல்லா குழுக்களுக்குச் சொந்தமான இடங்களுக்கு அருகே இருப்பவர்கள் கவனத்திற்கு, கூடிய விரைவில் அப்பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கவுள்ளது எனக் குறிப்பிட்டு, வரைபடத்தில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களையும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தெற்கு பெய்ரூட் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

பெய்ரூட் விமான நிலையம் அருகே ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதிகளில் இருந்த கட்டடங்கள் முழுவதுமாக சேதமடைந்தன.

ஓடுபாதைகளில் விமானங்கள் சென்றுக்கொண்டிருக்கும்போதே ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இதில் விமானங்கள் அவசரமாகத் திருப்பப்பட்டன. சுற்றியிருந்த கட்டடங்கள் முழுவதுமாக தரைமட்டமாகின.

பெய்ரூட்டில் இஸ்ரேல் எல்லையிலிருந்து 3 கி.மீ. சுற்றளவிலுள்ள கட்டடங்கள் முழுவதுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் மக்களுக்கு எதிரான ஹிஸ்புல்லாக்களின் மறைமுகத் தாக்குதலைத் தகர்க்கும் நோக்கத்தில் இஸ்ரேல் ராணுவம் இதனைச் செய்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு புதிய சேவை

ஆஸ்திரேலியாவில் எங்கும் குறுஞ்செய்திகளை அனுப்ப Telstra செயற்கைக்கோளிலிருந்து மொபைல் வரை குறுஞ்செய்தி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் கவரேஜ் உள்ள பகுதிகளில் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய...

ஆஸ்திரேலியாவில் அழகுசாதன ஊசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்

நோயாளிகளின் பாதுகாப்பிற்காக, சுகாதார நிபுணர்களின் அழகுசாதன ஊசி தொழில் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளி பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

சிட்னியில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட உடல் – ஒருவர் கைது

சிட்னியின் உள் மேற்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் பல கத்திக்குத்து காயங்களுடன் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது...

சட்டவிரோத புகையிலை சந்தையை சுத்தம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

சட்டவிரோத புகையிலை கறுப்புச் சந்தை தெருக்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறி, அதை சுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று NSW பிரதமர்...