Cinemaஇனி "உலக நாயகன்" என அழைக்க வேண்டாம் – கமல்ஹாசன்

இனி “உலக நாயகன்” என அழைக்க வேண்டாம் – கமல்ஹாசன்

-

உலக நாயகன் என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் இரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தனது 6 வயதில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து 64 ஆண்டுகளில் 230இற்கும் அதிகமான படங்களில் நடித்த கமல்ஹாசனுக்கு தெனாலி திரைப்படத்தில் அவருக்கு ”உலக நாயகன்” பட்டம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில், “என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன்.

ஆகவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...