Newsகிடு கிடுவென உயர்ந்த Bitcoin-இன் மதிப்பு

கிடு கிடுவென உயர்ந்த Bitcoin-இன் மதிப்பு

-

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் Bitcoin மதிப்பை எகிறச்செய்துள்ளது. ட்ரம்பின் வெற்றி Cryptocurrency-யில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக crypto-வின் முன்னணி கொயினான Bitcoin மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

அமெரிக்க டொலர் மதிப்பில் 88,817 டொலர்களை எட்டி Crypto சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75.62 இலட்சம் ஆகும். 1,00,000 டொலரை நெருங்கிக்கொண்டிருக்கும் Bitcoin மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

Cryptocurrency-யை ஆதரிக்கப்போவதாகத் தனது பிரசாரத்தில் ட்ரம்ப் சொன்னதே Bitcoin வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி Bitcoin ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.75 ட்ரில்லியன் ஆக உள்ளது. எனவே வெள்ளியின் சந்தை மதிப்பான 1.729 ட்ரில்லியன் டொலரை தற்போது Bitcoin சந்தை மதிப்பு ஓவர்டேக் செய்துள்ளது.

Latest news

டன் கணக்கில் உணவை வீசுவதால் ஆஸ்திரேலியர்கள் சந்திக்கும் அபாயங்கள்

ஆஸ்திரேலியர்கள் ஆண்டுதோறும் 7.6 மில்லியன் டன் உணவை வீசுவதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. சராசரி வீட்டிற்கு சுமார் $2,500 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக RMIT பல்கலைக்கழகம்...

விமான டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்துள்ள Virgin Australia

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் மீண்டும் பங்குச் சந்தையில் இணைந்ததைத் தொடர்ந்து, விர்ஜின் ஆஸ்திரேலியாவின் பங்கு விலை 8% உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊதிய இழப்புகள் காரணமாக சரிவைச் சந்தித்த...

ஆஸ்திரேலியாவில் போக்குவரத்து விபத்துக்களை அதிகரிக்கும் கைக்கடிகாரம்

வாகனம் ஓட்டும்போது smartwatchகளைப் பயன்படுத்துபவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த அபராதங்கள் மாநிலத்தைப் பொறுத்து $125 முதல் $2,000 வரை இருக்கும். வாகனம் ஓட்டும்போது...

போரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் மீட்பு

இஸ்ரேலின் Tel Aviv-இலிருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் துபாயில் தரையிறங்கினர். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் 119 பேரை விமானத்தில் ஏற்றிச்...

போரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் மீட்பு

இஸ்ரேலின் Tel Aviv-இலிருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் துபாயில் தரையிறங்கினர். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் 119 பேரை விமானத்தில் ஏற்றிச்...

ஆஸ்திரேலியாவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்துள்ள பணவீக்கம்

ஆஸ்திரேலிய பணவீக்கம் மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. பணவீக்க விகிதம் 2.8 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும்,...