Newsவிசா விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு அதிக கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு

விசா விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு அதிக கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு

-

ஆஸ்திரேலியர்களிடம் மத்திய அரசு சட்டவிரோதமாக பலகோடி வர்த்தக கட்டணமாக வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

அரசு பரிவர்த்தனைகளுக்கு பல பில்லியன் டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, சட்டவிரோத வர்த்தக கட்டணத்தை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஸ்போர்ட் புதுப்பித்தல், விசா விண்ணப்பங்கள் மற்றும் வரிக் கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஜான் ஹோவர்ட் அரசில் இருந்தே வாடிக்கையாளர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபரில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இதே போன்றதொரு கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டது.அங்கு மாநில அரசு 8 ஆண்டுகளாக 144 மில்லியன் டாலர்களை சட்டவிரோதமாக வசூலித்தது தெரியவந்தது.

இதன் காரணமாக இப்பிரச்னையை ஆய்வு செய்ய மத்திய அரசு அளவில் பணிக்குழு அமைக்கப்பட்டு, தணிக்கை சவால்கள் காரணமாக, கட்டணம் வசூலித்த நபர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கும் திட்டம் இல்லை என தெரியவந்துள்ளது.

ஜனவரி 1, 2025 முதல் டெபிட் கார்டு கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என நிதி அமைச்சர் கேத்தி கல்லாகர் தெரிவித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...