Newsவிக்டோரியாவில் குழந்தைகள் பாதுகாப்பு பணிக்குழுவை உருவாக்குமாறு கோரிக்கை

விக்டோரியாவில் குழந்தைகள் பாதுகாப்பு பணிக்குழுவை உருவாக்குமாறு கோரிக்கை

-

விக்டோரியா மாநிலத்திற்குள் குழந்தைகள் பாதுகாப்பு பணிக்குழுவை உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2017 க்கு இடையில் குடும்ப வன்முறையால் நான்கு மரணங்கள் ஏற்பட்டதாக விக்டோரியா மாநில மரண விசாரணை அதிகாரி அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6 மாதம் முதல் 15 வயது வரை உள்ள இந்த நான்கு குழந்தைகளின் மரணத்தின் மூலம் அரசு குழந்தை காப்பீட்டு திட்டத்தில் பல பாரிய பிரச்சனைகள் இருப்பது அரசு விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில், விக்டோரியாவில் உள்ள குடும்ப வன்முறை இறப்புகளின் மறுஆய்வு, இந்த மரணங்கள் குறித்து பொது விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் விக்டோரியா மாநில மரண விசாரணை அதிகாரி ஜோன் கேன் கூறுகையில், இந்த சம்பவங்களில் குடும்ப வன்முறைகள் இடம்பெற்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும் சிறுவர் பாதுகாப்பு அமைப்பு குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்க தவறியுள்ளது.

இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் விக்டோரியாவில் குழந்தைகள் பாதுகாப்பு கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய சீர்திருத்தங்கள் குறித்து பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...