News40 வருடத்தில் 12 முறை விவாகரத்து - $342,000 மோசடியில் ஈடுபட்ட...

40 வருடத்தில் 12 முறை விவாகரத்து – $342,000 மோசடியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய தம்பதி

-

அவுஸ்திரேலிய தம்பதியினர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்து மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியத்தில் இருந்த அட்டையைப் பயன்படுத்தி, போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் மூலம் லட்சக்கணக்கான டொலர்களை மோசடி செய்துள்ளனர்.

தற்போது 73 வயது கொண்ட மூதாட்டி, 1981 இல் தனது முதல் கணவர் இறந்த பிறகு விதவை பென்ஷன் பெற தொடங்கியதில் இருந்து இந்த மோசடியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

பொதுவாக மறுமணம் செய்துகொண்டால் விதவை பென்ஷன் பொதுவாக நிறுத்தப்படும் என்றாலும், அடுத்தடுத்த திருமணங்களின் போது ஒரு முறை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதை மூதாட்டி அப்போது தெரிந்து கொண்டு மோசடியில் இறங்கியுள்ளார்.

வேறொரு நபரை திருமணம் செய்து கொண்ட அவர், 1988ம் ஆண்டு முதல் அந்த நபருடன் சேர்ந்து ஒருவரையொருவர் திருமணம் செய்தும் விவாகரத்து செய்தும் ஒரு மோசடி சுழற்சியைத் தொடங்கியுள்ளார்.

இவ்வாறு 43 ஆண்டுகளில் பன்னிரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து விவாகரத்து செய்தும் மோசடியில் அந்த தம்பதியினர் இறங்கியுள்ளனர்.

இவர்களின் ஒவ்வொரு திருமணமும் சுமார் மூன்று ஆண்டுகள் நீடித்தது, பின்னர் கணவரின் வேலை நிமித்தமான அடிக்கடி வெளியூர் பயணங்களை காரணம் காட்டி விவாகரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண்களின் விதவைப் பென்ஷன் தொகை மீண்டும் மீண்டும் பெற்று $342,000 க்கும் அதிகமான இழப்பீடு தொகையை பெற்றுள்ளனர்.

அவர்களது திருமண வரலாற்றின் தொடர்ச்சியான தன்மையைப் பார்த்து ஓய்வூதிய அதிகாரிகள் சந்தேகம் அடைந்த போது அவர்களின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

மே 2022 இல் அவர்களின் சமீபத்திய “விவாகரத்துக்குப்” பிறகு, ஓய்வூதிய நிதி பெண்ணின் பலன்களை மீண்டும் வழங்க மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன் ஒரே நபரை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வதும் விவாகரத்து செய்வதும் துஷ்பிரயோகம் என்று தெரிவித்துள்ளது.

Latest news

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...

ஆஸ்திரேலியா சுதந்திரமாக இருக்க வேண்டும் – அல்பானீஸ் வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியா அமெரிக்காவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற முயற்சிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது உரையில் தெளிவுபடுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்று சிட்னியில் ஒரு முக்கிய...