News40 வருடத்தில் 12 முறை விவாகரத்து - $342,000 மோசடியில் ஈடுபட்ட...

40 வருடத்தில் 12 முறை விவாகரத்து – $342,000 மோசடியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய தம்பதி

-

அவுஸ்திரேலிய தம்பதியினர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்து மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியத்தில் இருந்த அட்டையைப் பயன்படுத்தி, போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் மூலம் லட்சக்கணக்கான டொலர்களை மோசடி செய்துள்ளனர்.

தற்போது 73 வயது கொண்ட மூதாட்டி, 1981 இல் தனது முதல் கணவர் இறந்த பிறகு விதவை பென்ஷன் பெற தொடங்கியதில் இருந்து இந்த மோசடியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

பொதுவாக மறுமணம் செய்துகொண்டால் விதவை பென்ஷன் பொதுவாக நிறுத்தப்படும் என்றாலும், அடுத்தடுத்த திருமணங்களின் போது ஒரு முறை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதை மூதாட்டி அப்போது தெரிந்து கொண்டு மோசடியில் இறங்கியுள்ளார்.

வேறொரு நபரை திருமணம் செய்து கொண்ட அவர், 1988ம் ஆண்டு முதல் அந்த நபருடன் சேர்ந்து ஒருவரையொருவர் திருமணம் செய்தும் விவாகரத்து செய்தும் ஒரு மோசடி சுழற்சியைத் தொடங்கியுள்ளார்.

இவ்வாறு 43 ஆண்டுகளில் பன்னிரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து விவாகரத்து செய்தும் மோசடியில் அந்த தம்பதியினர் இறங்கியுள்ளனர்.

இவர்களின் ஒவ்வொரு திருமணமும் சுமார் மூன்று ஆண்டுகள் நீடித்தது, பின்னர் கணவரின் வேலை நிமித்தமான அடிக்கடி வெளியூர் பயணங்களை காரணம் காட்டி விவாகரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண்களின் விதவைப் பென்ஷன் தொகை மீண்டும் மீண்டும் பெற்று $342,000 க்கும் அதிகமான இழப்பீடு தொகையை பெற்றுள்ளனர்.

அவர்களது திருமண வரலாற்றின் தொடர்ச்சியான தன்மையைப் பார்த்து ஓய்வூதிய அதிகாரிகள் சந்தேகம் அடைந்த போது அவர்களின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

மே 2022 இல் அவர்களின் சமீபத்திய “விவாகரத்துக்குப்” பிறகு, ஓய்வூதிய நிதி பெண்ணின் பலன்களை மீண்டும் வழங்க மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன் ஒரே நபரை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வதும் விவாகரத்து செய்வதும் துஷ்பிரயோகம் என்று தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் இரண்டு முறை வரி செலுத்த வேண்டுமா?

வரும் நாட்களில் விதிக்க திட்டமிடப்பட்டுள்ள சாலை பயனர் வரி, மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறியுள்ளார். அதன்படி, பெட்ரோல் வாகன பயனர்களுக்கு...

விக்டோரிய மக்களுக்கு $4 மில்லியன் மதிப்புள்ள இலவச பயிற்சி வகுப்புகள்

விக்டோரியன் அரசு, ஊழியர்களுக்கும் வணிகங்களுக்கும் தேவையான டிஜிட்டல் திறன்களை வழங்குவதற்காக ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, $4.2 மில்லியன் டிஜிட்டல் வேலைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது...

விக்டோரியாவில் 1000 புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று கிறிஸ்துமஸுக்கு முன்பு 3,500 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த தயாராகி வருகிறது. Australia Post தனது பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த...

LGBTQ சமூகத்தை ஆதரிக்க விக்டோரியன் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கை

வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவிக்கும் விக்டோரியன் LGBTQ சமூகங்களை ஆதரிப்பதற்காக விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய ஆதரவு சேவையைத் தொடங்கியுள்ளது. இந்தப் புதிய சேவை 'Switchboard Victoria'...

சர்க்கரை இல்லாமல் காபி குடித்தால் உடலுக்கு நல்லதா?

Caffeine கலந்த காபி குடிப்பதால் ஆயுட்காலம் அதிகரிப்பதாகவும், இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது. Tufts பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதைக்...

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட இரு தொல்பொருள் பொருட்கள்

உக்ரைனில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட இரண்டு தொல்பொருள் பொருட்கள் உக்ரைனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைனின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சிட்னியில் நடந்த விழாவில்...