News40 வருடத்தில் 12 முறை விவாகரத்து - $342,000 மோசடியில் ஈடுபட்ட...

40 வருடத்தில் 12 முறை விவாகரத்து – $342,000 மோசடியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய தம்பதி

-

அவுஸ்திரேலிய தம்பதியினர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்து மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியத்தில் இருந்த அட்டையைப் பயன்படுத்தி, போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் மூலம் லட்சக்கணக்கான டொலர்களை மோசடி செய்துள்ளனர்.

தற்போது 73 வயது கொண்ட மூதாட்டி, 1981 இல் தனது முதல் கணவர் இறந்த பிறகு விதவை பென்ஷன் பெற தொடங்கியதில் இருந்து இந்த மோசடியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

பொதுவாக மறுமணம் செய்துகொண்டால் விதவை பென்ஷன் பொதுவாக நிறுத்தப்படும் என்றாலும், அடுத்தடுத்த திருமணங்களின் போது ஒரு முறை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதை மூதாட்டி அப்போது தெரிந்து கொண்டு மோசடியில் இறங்கியுள்ளார்.

வேறொரு நபரை திருமணம் செய்து கொண்ட அவர், 1988ம் ஆண்டு முதல் அந்த நபருடன் சேர்ந்து ஒருவரையொருவர் திருமணம் செய்தும் விவாகரத்து செய்தும் ஒரு மோசடி சுழற்சியைத் தொடங்கியுள்ளார்.

இவ்வாறு 43 ஆண்டுகளில் பன்னிரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து விவாகரத்து செய்தும் மோசடியில் அந்த தம்பதியினர் இறங்கியுள்ளனர்.

இவர்களின் ஒவ்வொரு திருமணமும் சுமார் மூன்று ஆண்டுகள் நீடித்தது, பின்னர் கணவரின் வேலை நிமித்தமான அடிக்கடி வெளியூர் பயணங்களை காரணம் காட்டி விவாகரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண்களின் விதவைப் பென்ஷன் தொகை மீண்டும் மீண்டும் பெற்று $342,000 க்கும் அதிகமான இழப்பீடு தொகையை பெற்றுள்ளனர்.

அவர்களது திருமண வரலாற்றின் தொடர்ச்சியான தன்மையைப் பார்த்து ஓய்வூதிய அதிகாரிகள் சந்தேகம் அடைந்த போது அவர்களின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

மே 2022 இல் அவர்களின் சமீபத்திய “விவாகரத்துக்குப்” பிறகு, ஓய்வூதிய நிதி பெண்ணின் பலன்களை மீண்டும் வழங்க மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன் ஒரே நபரை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வதும் விவாகரத்து செய்வதும் துஷ்பிரயோகம் என்று தெரிவித்துள்ளது.

Latest news

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலிய பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடல் வெப்பநிலை கடந்த ஆண்டு சாதனை அளவை எட்டியது. வெப்பமான கடல் நீர்,...

Hoskyn தீவில் மூழ்கும் படகிலிருந்து மீட்கப்பட்ட நான்கு பேர்

தெற்கு Great Barrier Reef-இல் உள்ள ஒரு தொலைதூரத் தீவான Hoskyn தீவு அருகே மூழ்கும் படகிலிருந்து நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் Hoskyn...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

சிட்னியில் கயிற்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கூன் முதுகு திமிங்கலம்

சிட்னி துறைமுகத்திற்கு அருகிலுள்ள தெற்கு கடலில் கயிற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருக்கும் ஒரு கூன் முதுகு திமிங்கலம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலிய Cetaceans...