News40 வருடத்தில் 12 முறை விவாகரத்து - $342,000 மோசடியில் ஈடுபட்ட...

40 வருடத்தில் 12 முறை விவாகரத்து – $342,000 மோசடியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய தம்பதி

-

அவுஸ்திரேலிய தம்பதியினர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்து மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியத்தில் இருந்த அட்டையைப் பயன்படுத்தி, போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் மூலம் லட்சக்கணக்கான டொலர்களை மோசடி செய்துள்ளனர்.

தற்போது 73 வயது கொண்ட மூதாட்டி, 1981 இல் தனது முதல் கணவர் இறந்த பிறகு விதவை பென்ஷன் பெற தொடங்கியதில் இருந்து இந்த மோசடியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

பொதுவாக மறுமணம் செய்துகொண்டால் விதவை பென்ஷன் பொதுவாக நிறுத்தப்படும் என்றாலும், அடுத்தடுத்த திருமணங்களின் போது ஒரு முறை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதை மூதாட்டி அப்போது தெரிந்து கொண்டு மோசடியில் இறங்கியுள்ளார்.

வேறொரு நபரை திருமணம் செய்து கொண்ட அவர், 1988ம் ஆண்டு முதல் அந்த நபருடன் சேர்ந்து ஒருவரையொருவர் திருமணம் செய்தும் விவாகரத்து செய்தும் ஒரு மோசடி சுழற்சியைத் தொடங்கியுள்ளார்.

இவ்வாறு 43 ஆண்டுகளில் பன்னிரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து விவாகரத்து செய்தும் மோசடியில் அந்த தம்பதியினர் இறங்கியுள்ளனர்.

இவர்களின் ஒவ்வொரு திருமணமும் சுமார் மூன்று ஆண்டுகள் நீடித்தது, பின்னர் கணவரின் வேலை நிமித்தமான அடிக்கடி வெளியூர் பயணங்களை காரணம் காட்டி விவாகரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண்களின் விதவைப் பென்ஷன் தொகை மீண்டும் மீண்டும் பெற்று $342,000 க்கும் அதிகமான இழப்பீடு தொகையை பெற்றுள்ளனர்.

அவர்களது திருமண வரலாற்றின் தொடர்ச்சியான தன்மையைப் பார்த்து ஓய்வூதிய அதிகாரிகள் சந்தேகம் அடைந்த போது அவர்களின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

மே 2022 இல் அவர்களின் சமீபத்திய “விவாகரத்துக்குப்” பிறகு, ஓய்வூதிய நிதி பெண்ணின் பலன்களை மீண்டும் வழங்க மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன் ஒரே நபரை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வதும் விவாகரத்து செய்வதும் துஷ்பிரயோகம் என்று தெரிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...