Sportsவீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளர்

வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளர்

-

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பெயரில் ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் பயிற்சியாளர் ஒருவரை அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆணையம் கட்டாய விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

பையத்லட்டுகள் பலர் அளித்த குற்றச்சாட்டை விசாரிக்க, அமெரிக்க பையத்லான் உறுப்பினர்களுக்கு அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆணையம் மின்னஞ்சல் அனுப்பியது. மின்னஞ்சல் செய்தியில், பயிற்சியாளர் ஒருவர் கட்டாய விடுமுறையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், புகார் அளித்த வீரர்களின் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பயிற்சியாளரின் பெயர் விவரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. விசாரணை நடக்கும்போது கூடுதல் விhரங்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்று அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆணையம் (யு.எஸ்.ஓ.பி.சி) செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த நிலையில், பயிற்சியாளர் கேரி கோலியண்டர் மீது வில் வீராங்கனை கிரேஸ் பௌடோட் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தனது 15ஆவது வயதில் இருந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக கேரி மீது கிரேஸ் குற்றம் சாட்டியுள்ளார். கிரேஸ், தனது 18 ஆவது வயதில் பாலியல் துன்புறுத்தலை

எதிர்த்தபோதும், அவருக்கு கேரி மிரட்டல் விடுத்துள்ளார். தனது பையத்லான் கனவு பாழாகி விடும் என்ற அச்சத்துடனேயே கிரேஸ் இருந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிரேஸ் மிகுந்த மனச்சோர்வில் இருப்பதை அறிந்த வைத்தியர், கிரேஸுக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்துமாறு கேரியிடம் கூறியுள்ளார். இருப்பினும், மிகுந்த மனஉளைச்சலில் இருந்த கிரேஸ், 2010ஆம் ஆண்டு, ஒக்டோபரில் அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும், அங்கிருந்த சக விளையாட்டு வீரரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கிரேஸ் காப்பாற்றப்பட்டார்.

அடுத்த நாளிலேயே, கேரி தனது பதவியை இராஜிநாமா செய்தார். இருப்பினும், 2016ஆம் ஆண்டில், நோர்டிக் பனிச்சறுக்கு உயர் செயல்திறன் இணை இயக்குநராக அமெரிக்க பராலிம்பிக் அணியால் பணியமர்த்தப்பட்டார். பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக ஒலிம்பிக் வீரர் ஜோன் ரெய்ட் சில மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, பல விளையாட்டு வீராங்கனைகளும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...