Newsமோசமாகிவரும் விக்டோரியா காட்டுத்தீ - கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

மோசமாகிவரும் விக்டோரியா காட்டுத்தீ – கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

-

தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக விக்டோரியா மாகாணத்தின் சில பகுதிகளில் பல அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

காட்டுத் தீ நிலைமை கட்டுக்கடங்காமல் பரவி வருவதோடு, இதுவரை 34000 ஹெக்டேயர் நாசமாகியுள்ளதுடன், இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் காட்டுத் தீ நிலைமை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, தற்போது Grampiand தேசிய பூங்கா பகுதியில் இருந்து வடக்கில் இருந்து Halls Gap நோக்கி காட்டுத் தீ நிலைமை நகர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, Belfield, Belfield Settlement, Flat Rock Crossing, Fyans Creek, Gampians Junction மற்றும் Halls Gap உள்ளிட்ட பல பகுதிகளில் வசிப்பவர்களை அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், ஏற்கனவே அந்த பகுதிகளை விட்டு வெளியேறிய குடியிருப்பாளர்களை அந்த பகுதிகளுக்கு திரும்ப வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...