Newsமோசமாகிவரும் விக்டோரியா காட்டுத்தீ - கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

மோசமாகிவரும் விக்டோரியா காட்டுத்தீ – கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

-

தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக விக்டோரியா மாகாணத்தின் சில பகுதிகளில் பல அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

காட்டுத் தீ நிலைமை கட்டுக்கடங்காமல் பரவி வருவதோடு, இதுவரை 34000 ஹெக்டேயர் நாசமாகியுள்ளதுடன், இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் காட்டுத் தீ நிலைமை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, தற்போது Grampiand தேசிய பூங்கா பகுதியில் இருந்து வடக்கில் இருந்து Halls Gap நோக்கி காட்டுத் தீ நிலைமை நகர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, Belfield, Belfield Settlement, Flat Rock Crossing, Fyans Creek, Gampians Junction மற்றும் Halls Gap உள்ளிட்ட பல பகுதிகளில் வசிப்பவர்களை அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், ஏற்கனவே அந்த பகுதிகளை விட்டு வெளியேறிய குடியிருப்பாளர்களை அந்த பகுதிகளுக்கு திரும்ப வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...