Newsமோசமாகிவரும் விக்டோரியா காட்டுத்தீ - கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

மோசமாகிவரும் விக்டோரியா காட்டுத்தீ – கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

-

தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக விக்டோரியா மாகாணத்தின் சில பகுதிகளில் பல அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

காட்டுத் தீ நிலைமை கட்டுக்கடங்காமல் பரவி வருவதோடு, இதுவரை 34000 ஹெக்டேயர் நாசமாகியுள்ளதுடன், இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் காட்டுத் தீ நிலைமை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, தற்போது Grampiand தேசிய பூங்கா பகுதியில் இருந்து வடக்கில் இருந்து Halls Gap நோக்கி காட்டுத் தீ நிலைமை நகர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, Belfield, Belfield Settlement, Flat Rock Crossing, Fyans Creek, Gampians Junction மற்றும் Halls Gap உள்ளிட்ட பல பகுதிகளில் வசிப்பவர்களை அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், ஏற்கனவே அந்த பகுதிகளை விட்டு வெளியேறிய குடியிருப்பாளர்களை அந்த பகுதிகளுக்கு திரும்ப வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...