Newsமெட்டா நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டம்

மெட்டா நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டம்

-

Facebook, Instagram மற்றும் Whatsapp உள்ளிட்ட வலைத்தளங்களை இயக்கி வரும் சமூக ஊடகங்களில் ஒன்றான Meta நிறுவனம் சமீபத்தில் அதன் கொள்கையில் சில மாற்றங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதுவரை வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த உண்மை கண்டறியும் நடைமுறையில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன்படி, தகவல்களைச் சரிபார்க்கும் திட்டக் கொள்கை கைவிடப்படும் என்ற முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதன் தளங்களில் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல் பரிவர்த்தனை பற்றிய விடயங்களில் இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் கைவிடப்படுகின்றன என Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், உண்மை கண்டறியும் நடைமுறையில் வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கைகளைக் கைவிடுவது பற்றி விளக்கமளிக்கும்படி கோரி மெட்டா நிறுவனத்திற்கு பிரேசில் அரசாங்கம் அறிக்கை அனுப்பியுள்ளது. இதற்காக 72 மணிநேர காலக்கெடுவும் விதித்துள்ளது.

குறித்த அறிக்கையில் , குழந்தைகள் மற்றும் முதியவர்கள், ஆபத்து சூழலிலுள்ள பாதுகாப்பற்ற மக்கள் மற்றும் வணிகச் சூழலைப் பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறையை பிரேசில் கொண்டுள்ளது. டிஜிட்டல் படுகொலை மற்றும் காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றால் இந்தச் சூழலை மாற்ற நாங்கள் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, பிரேசில் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹத்தட்டின் AI வீடியோ ஒன்றை நீக்கும்படி Meta நிறுவனத்திற்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளார். கடந்த காலங்களில், TikTok மற்றும் X போன்ற வலைதளங்களுக்கு எதிராக தற்காலிக சேவை முடக்கம் என்ற சட்ட ரீதியிலான நடைமுறையைப் பிரேசில் எடுத்துள்ளது.

Latest news

பாக்டீரியாக்களை கொல்லும் ஒருவகை சிப்பி இனம்

ஆஸ்திரேலிய சிப்பியின் ஒரு இனம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம் நடத்தியது. Sacostria glomerata எனப்படும்...

ஆஸ்திரேலியாவிலிருந்து மேலும் இரண்டு நாடுகளுக்கு மனிதாபிமான விசாக்கள்

சுமார் ஆயிரம் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியாவால் தற்காலிக மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் குடிமக்களுக்கு அக்டோபர் 2024 முதல் தற்போது...

ஆஸ்திரேலியர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்து வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த புதிய அறிக்கையை மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 20 சதவீதம்...

ஆஸ்திரேலிய மாநிலங்களில் அதிகரித்துவரும் வெப்பநிலை

மேற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த கோடையில் பெர்த் பெருநகர விமான நிலையத்தில் வெப்பநிலை 44.7 டிகிரியாகவும், நகரின் வெப்பநிலை...

கடந்த சில நாட்களாக விக்டோரியா சாலையில் அதிகரித்துள்ள விபத்துக்கள்

மெல்பேர்ண் கிழக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மவுண்ட் ஈவ்லினில் உள்ள கிளெக் வீதியில் சாரதி...

உலகின் முதல் டிரில்லியனர் பற்றிய புதிய வெளிப்பாடு

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் சொத்துக்கள் குறித்த சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, எலோன் மஸ்க் மீண்டும் உலகின் பணக்காரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரது...