Newsஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய சமீபத்திய அறிக்கை

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய சமீபத்திய அறிக்கை

-

கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு குறைந்துள்ளதாக CSIRO ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது கிட்டத்தட்ட 39 சதவீதம் குறைந்துள்ளதாக ஆராய்ச்சி அறிக்கை குறிப்பிடுகின்றது.

நேற்று வெளியிடப்பட்ட இந்த மதிப்பாய்வின்படி, 1,907 ஆய்வுகளில் 8,383 பல்வேறு குப்பைத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த குப்பைகளுக்கு இடையில் சிகரெட் துண்டுகளும் polystyrene துண்டுகளும் பொதுவாகக் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2030 ஆம் ஆண்டுக்குள், உலகளவில் நீர்வாழ் சூழல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு ஆண்டுக்கு 53 மெட்ரிக் டன்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதல், பொது விழிப்புணர்வு திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் பயனுள்ள பிரச்சாரங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்தல் போன்ற திட்டங்களை CSIRO ஆராய்ச்சி நிறுவனம் ஆஸ்திரேலியாவிற்காக முன்மொழிந்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...