திடீரென இறந்த இரண்டு வயது குழந்தையின் இதயத்தை நோயாளி ஒருவருக்கு தானம் செய்ய பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Redlynch’s Busy Bees குழந்தை பராமரிப்பு மையத்தில் Henry Spletter சுவாசப் பிரச்சினைகளால் சரிந்து விழுந்தார்.
பின்னர் மருத்துவர்கள் அவரை உயிர்ப்பித்து Townsville பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சனிக்கிழமை அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
குழந்தைக்கு ‘உயிர் பிழைக்க முடியாத மூளை காயம்’ ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், Henry-இன் மூச்சுத் திணறலுக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
குழந்தை பராமரிப்பு மைய ஊழியர்கள் சிறந்த முதலுதவி அளித்ததாகவும், அதற்காக அவர்களுக்கும் Townsville தீவிர சிகிச்சை பிரிவு துறைகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.





