மது அருந்துவது டிமென்ஷியா மற்றும் பிற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த தகவல் Journal Neurology இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரேசிலில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி, 1,781 பிரேத பரிசோதனைகளின் தரவை பகுப்பாய்வு செய்தது.
இது மூளையில் மதுவின் நீண்டகால விளைவுகளையும் வெளிப்படுத்தியது.
அதிகமாக மது அருந்துபவர்களுக்கு hyaline arteriolosclerosis மற்றும் Arterial thickening ஏற்படும் அபாயம் 133 சதவீதம் அதிகம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த செயல்முறை மூளைக்கு இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் நினைவாற்றலை சேதப்படுத்துகிறது.