Breaking Newsபெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் - ஆஸ்திரேலியர் கைது

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் – ஆஸ்திரேலியர் கைது

-

இந்தோனேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஒரு ஆஸ்திரேலியர் உட்பட 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இரண்டு மாதங்களாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகள் அரை டன்னுக்கும் அதிகமான பல்வேறு போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 21 பெண்கள் மற்றும் ஏழு வெளிநாட்டினர் அடங்குவர்.

அவர்களில் ஒரு ஆஸ்திரேலியர், ஒரு அமெரிக்கர், இரண்டு Kazakh நாட்டினர், இரண்டு மலேசியர்கள் மற்றும் ஒரு இந்தியர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களும், 21 பெண்கள் உட்பட 36 சந்தேக நபர்களும் கைவிலங்குகள் மற்றும் ஆரஞ்சு நிற சிறைச் சீருடைகளை அணிந்தபடி செய்தியாளர்கள் முன் அணிவகுத்துச் செல்லப்பட்டனர்.

இந்த மாத தொடக்கத்தில், இந்தோனேசியாவிற்கு கிட்டத்தட்ட ஒரு கிலோகிராம் கோகைன் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பிரிட்டிஷ் பிரஜைகள் மீது பாலி தீவில் உள்ள நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. நாட்டின் கடுமையான போதைப்பொருள் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...