Uffizi அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் selfie மற்றும் Memes எடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Florenceஇல் உள்ள Uffizi கேலரியில் புகைப்படம் எடுக்கச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் 17 ஆம் நூற்றாண்டின் ஓவியத்தை சேதப்படுத்தியதாக அருங்காட்சியகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சேதமடைந்த ஓவியம் 1695-1700 க்கு இடையில் Anton Domenico Gabbiani-ஆல் வரையப்பட்ட Tuscany இளவரசரின் மகன் Ferdinando de’ Medici-யின் ஓவியமாகும்.
ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பிரபுவின் கணுக்காலில் ஒரு சிறிய கீரல் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
பொதுவில் அடையாளம் காணப்படாத சுற்றுலாப் பயணி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், பழுதுபார்ப்புக்காக ஓவியம் காட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. மேலும் ஓவியம் சிறிய சேதத்தை சந்தித்துள்ளதாக அருங்காட்சியகம் கூறுகிறது.
இது விரைவில் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் காட்சிக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.