ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய காப்பகத்தை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
சுமார் 12,000 கோலாக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
அதன்படி, தற்போதுள்ள தேசிய பூங்காவுடன் 176,000 ஹெக்டேர்களைச் சேர்த்து 476,000 ஹெக்டேர் காப்பகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும்.
இந்த திட்டத்திற்காக $60 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 2023 இல் $80 மில்லியன் வழங்கப்பட்டது.
வாழ்விட இழப்பு மற்றும் சமீபத்திய கடுமையான காட்டுத்தீ ஆகியவற்றால் கோலாக்களின் எண்ணிக்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், Timbers, Furnishing and Textiles Union (TFTU) இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளது.
திட்டத்தின் ஒரு பகுதியாக, பூங்காவிற்கான முன்மொழியப்பட்ட எல்லைக்குள் மரம் வெட்டுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது 6 மர ஆலைகளையும் சுமார் 300 வேலைகளையும் பாதிக்கும் என்று சங்கம் சுட்டிக்காட்டுகிறது.





