Cinemaசர்வதேச அளவில் Meta AI-க்குக் குரல் கொடுக்கும் முதல் இந்திய பிரபலம்

சர்வதேச அளவில் Meta AI-க்குக் குரல் கொடுக்கும் முதல் இந்திய பிரபலம்

-

பொலிவுட் நடிகை தீபிகா படுகோன், Meta நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பதிப்பிற்கான புதிய குரலாகப் பல்வேறு நாடுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது Instagram பக்கத்தில், தீபிகா படுகோன் ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டார்.

அதில், “ஹாய், நான் தீபிகா படுகோன். நான் Meta AI-இன் புதிய குரல். ரிங்கைப் தட்டுங்கள், எனது குரல் வரும்” என்று தான் கலையகத்தில் குரல் பதிவு செய்வதைப் பதிவிட்டுள்ளார்.

“இது மிகவும் அருமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் இப்போது Meta AI-இன் ஒரு பகுதியாக இருக்கிறேன், எனது குரலில் ஆங்கிலத்தில் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முழுவதும் நீங்கள் உரையாடலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் Meta AI-க்குக் குரல் கொடுத்த முதல் இந்தியப் பிரபலம் தீபிகா படுகோன் ஆவார்.

சமீபத்தில் உலக மனநல தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் முதலாவது மனநல தூதராக தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகை தீபிகா படுகோன் தற்போது தனது அடுத்த படமான ‘கிங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

இது ஷாருக்கானுடன் அவர் இணையும் ஆறாவது திரைப்படமாகும்.

இதற்கு முன் அட்லீ இயக்கிய ‘ஜவான்’ திரைப்படத்தில் இருவரும் கடைசியாக இணைந்து நடித்திருந்தனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...