மானிய விலையில் மின்-பைக்குகள் மற்றும் மின்-ஸ்கூட்டர்களை மக்களுக்கு வழங்குவதற்காக குயின்ஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சட்டவிரோத சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளதாக உள் தணிக்கையில் தெரியவந்துள்ளது.
மணிக்கு 25 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கக்கூடிய மற்றும் 250 வாட்களுக்கு மேல் மோட்டார்கள் கொண்ட சட்டவிரோத சாதனங்கள் இந்தப் பெயரில் விற்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
தொழிற்கட்சி அரசாங்கம் இந்த நிவாரணத் திட்டத்தை செப்டம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் மக்களுக்கு மின்-பைக்குகளுக்கு $500 மற்றும் மின்-ஸ்கூட்டர்களுக்கு $200 வழங்கப்பட்டது.
இருப்பினும், நிதியளிக்கப்பட்ட 3,265 மின்-பைக்குகளில் 693 சட்டவிரோதமானவை அல்லது சட்டவிரோதமாக இருக்க வாய்ப்புள்ளதாக தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கூடுதலாக, 141 மின்-ஸ்கூட்டர்கள் சட்டவிரோதமானது என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், சரியான திட்டமிடல் இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தியதால் பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போதைய போக்குவரத்து அமைச்சர் Brent Mickelberg குற்றம் சாட்டுகிறார்.
அரசாங்கம் உடனடியாக சட்டவிரோதமாக வாங்கப்பட்ட சாதனங்களைக் கைப்பற்றி, அவற்றைப் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Shannon Fentiman கூறுகிறார்.
இந்த மின்னணு சாதனங்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.





