இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் ஆஸ்திரேலியா பயணம் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது முடிவை ஆதரித்துள்ளார்.
டிசம்பர் 14 ஆம் திகதி Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்தப் பயணம் முதன்மையாக ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை பிரதமர் வலியுறுத்துகிறார்.
பெர்த்தில் ஊடகங்களிடம் பேசிய அல்பானீஸ், Bondi தாக்குதலில் இழந்த உயிர்களை நினைவுகூருவதும், ஒடுக்கப்பட்ட யூத சமூகத்திற்கு பலம் அளிப்பதும் ஜனாதிபதி ஹெர்சாக்கின் வருகையின் முக்கிய நோக்கம் என்று கூறினார்.
இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரலைப் போன்ற ஒரு அந்தஸ்து இருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர், எவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால் இந்த வருகையின் மனிதாபிமான நோக்கத்தை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், இந்த வருகையை பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
இதற்குக் காரணம், காசா பகுதியில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாக இஸ்ரேலிய ஜனாதிபதி மீது சர்வதேச அளவில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்தான்.
இந்த விஜயத்தை ரத்து செய்யுமாறு சிலர் கோரிக்கை விடுத்திருந்தாலும், ஜனாதிபதி அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
ஜனாதிபதி ஹெர்சாக் தனது நான்கு நாள் பயணத்தின் போது பிரதமர் அல்பானீஸ், யூத சமூகத் தலைவர்கள் மற்றும் Bondi தாக்குதலில் இருந்து தப்பியவர்களைச் சந்திக்க உள்ளார்.





