Newsகொரோனா தோற்றம் குறித்து அனைத்து நாடுகளும் தெரிந்த விபரங்களை வெளியிட வேண்டும்!

கொரோனா தோற்றம் குறித்து அனைத்து நாடுகளும் தெரிந்த விபரங்களை வெளியிட வேண்டும்!

-

உலகம் முழுவதும் பரவலாக, பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. 

சீனாவின் உகான் நகர ஆய்வகத்தில் இந்த வைரசானது தோற்றுவிக்கப்பட்டுள்ளது என உலக நாடுகள் சந்தேகம் எழுப்பின. 

அமெரிக்காவின் எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் ரே, சமீபத்தில் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் கூறும்போது, கொரோனா பெருந்தொற்றின் தோற்றம் பற்றி எங்களது அமைப்பு நடத்திய புலனாய்வில், அது உகான் நகரில் உள்ள ஆற்றல்மிக்க ஆய்வகத்தில் இருந்து தோன்றியிருக்க கூடும் என கூறினார். 

இது எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பிரசாரம் என கூறி சீனா அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. 

இதுபற்றி உலக சுகாதார அமைப்பும் தனது விசாரணையை தொடங்கியது. நேரடி விசாரணையும் நடத்தியது. எனினும், போதிய தகவல் கிடைக்க பெறாமல் உள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தெரிவிக்கையில்,

கொரோனா வைரசின் தோற்றம் பற்றி தங்களுக்கு என்ன விவரங்கள் தெரியுமோ, அவற்றை அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

அந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அறிவியல் சமூகத்திடம் பகிர்ந்து கொள்வது அவசியம் ஆகிறது என டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறியுள்ளார். 

நாம் பழி போடும் விசயங்களை விட்டு, விட்டு இந்த பெருந்தொற்று எப்படி தொடங்கியது என்பது பற்றிய நமது புரிதலில் முன்னேற்றம் அடைய வேண்டும். 

அதனால், வருங்காலத்தில் ஏற்பட கூடிய இதுபோன்ற நோய் தொற்றுகள் மற்றும் பெருந்தொற்றுகளை தடுக்க முடிவதுடன், நாம் அதற்கு தயாராகவும், அவற்றை எதிர்கொள்ளவும் முடியும் என கூறியுள்ளார். 

கொரோனா வைரசானது எப்படி வந்தது? மற்றும் மனிதர்களிடையே எப்படி பரவ தொடங்கியது? என்பது பற்றிய அறியப்படாத விசயங்களை அறிந்து கொள்வது, வருங்கால பெருந்தொற்றுகளை தவிர்ப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார். 

சமீபத்தில் சீனாவின் உயரதிகாரிக்கு கடிதம் ஒன்றின் வழியே, ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொண்டுள்ளேன். ஏனெனில், பெருந்தொற்று எப்படி தொடங்கியது? என்பது பற்றிய தகவலில் வெளிப்படை தன்மை மற்றும் ஒத்துழைப்பு தேவையாகவுள்ளது என கேட்டு கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

போராட்டங்களின் போது Capsicum spray தெளிப்பது சட்டவிரோதம் – நீதிமன்ற தீர்ப்பு

அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் Capsicum spray பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு...

பாலியில் போக்குவரத்து விதிகளை மீறிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம்

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம் Tia Billinger, போக்குவரத்து விதிமீறலுக்காக பாலி நீதிமன்றத்தில் ஆஜரானார். Bonnie Blue என்றும் அழைக்கப்படும் அவர், "Bang Bus" என்று பெயரிடப்பட்ட...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

கிறிஸ்துமஸ் பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள் – மருத்துவர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனை (RCH) மருத்துவர்கள், கிறிஸ்துமஸ் பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கும்போது குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர். காந்தங்கள் மற்றும் பொத்தான் பேட்டரிகள்...