Newsகைலாசாவில் இலவச குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் - நித்யானந்தா அறிவிப்பு

கைலாசாவில் இலவச குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் – நித்யானந்தா அறிவிப்பு

-

நித்யானந்தாவின் கைலாசா நாடு பற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், ஜெனிவாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஐ.நா.மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கைலாசா பெண் பிரதிநிதிகள் பேசிய உரை ஏற்றுக்கொள்ளப்படாது என ஐ.நா. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கைலாசா நாட்டிற்கு ஐ.நா.சபை அங்கீகாரம் அளித்துள்ளதா என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் கைலாசா பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும் நித்யானந்தா அவற்றை பற்றி கவலைப்படவில்லை.

மாறாக கைலாசா பற்றிய புதிய அறிவிப்புகளை அறிவித்து கொண்டே இருக்கிறார். அந்த வகையில் நித்யானந்தா நிறுவி உள்ள கைலாசாவிற்கு ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒப் கைலாஷ்’ என்று பெயரிட்டுள்ளார். மேலும் கைலாசாவின் ஐக்கிய மாகாணங்களில் இலவச மின்குடியுரிமைக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம் என கைலாசாவின் சமூகவலைத்தள பக்கங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், உலகம் எங்கிலும் உள்ள இந்துக்களுக்கு என்று உருவாகி இருக்கும் நாடு கைலாசா. எனவே உலகம் எங்கிலும் உள்ள இந்துக்கள் கைலாசாவின் குடியுரிமை பெற வேண்டும். அதனால் அவர்கள் இ-குடியுரிமை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த இ-குடியுரிமை பெறுவதற்காக https://kailaasa.org/e-citizen/ என்ற சிறப்பு இணைய தளமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. https://kailaasa.org/e-citizen/ என்ற இந்த இணைப்பை கிளிக் செய்து விபரங்களை பூர்த்தி செய்தால் கைலாசா நாட்டின் இ-குடியுரிமையை பெறலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...