Breaking News26 வயது இளைஞரின் வயிற்றில் வொட்கா போத்தல் - மருத்துவர்கள் அதிர்ச்சி

26 வயது இளைஞரின் வயிற்றில் வொட்கா போத்தல் – மருத்துவர்கள் அதிர்ச்சி

-

நேபாளத்தில் 26 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து வொட்கா போத்தல் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

நேபாளத்தில் குஜாரா நகராட்சியை சேர்ந்த நுர்சத் மன்சூரி என்பவருக்கு அண்மையில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவரின் வயிற்றில் போத்தல் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பின்னர் இரண்டரை மணித்தியால அறுவை சிகிச்சைக்கு பிறகு நுர்சத் மன்சூரியின் வயிற்றில் இருந்த வொட்கா போத்தலை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். 

போத்தல் அவரது குடலைத் துண்டித்து, மலக்கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தியதாகவும், இருப்பினும் அவர் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். 

மன்சூரியின் நண்பர்கள் அவரைக் குடிக்க வைத்துவிட்டு, ஆசனவாய் வழியாக போத்தலை வயிற்றுக்குள் வலுக் கட்டாயமாக திணித் திருக்கலாம் என்று பொலிஸார் கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக ஷேக் சமீம் என்பரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, மன்சூரியின் நண்பர்கள் சிலரிடமும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

நன்றி தமிழன்

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...