Newsசிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

-

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் இராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகின்றது. 

இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் அலெப்போ மாகாணத்தில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

அதிகாலை நேரத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் அடுத்தடுத்து பல ஏவுகணைகளை வீசின. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. 

அதே சமயம் ஏவுகணைகள் தாக்கியதில் விமான நிலையம் பலத்த சேதம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகள் வந்து சேரும் முக்கிய வழித்தடமாக அலெப்போ சர்வதேச விமான நிலையம் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

உலகிலேயே அதிக நேரம் தூங்குபவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது

மனித தூக்கம் தொடர்பாக ஒரு அமெரிக்க ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வின்படி, அந்த தரவரிசையில் 12 மணிநேரத்துடன் பல்கேரியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அகோலா உள்ளது,...

39 ஆண்டுகளுக்குப் பிறகு மாறும் ஆஸ்திரேலியர்களின் விருப்பமான பயண இலக்கு

ஆஸ்திரேலியர்கள் பார்வையிட மிகவும் பிரபலமான 10 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் பணியகம் சமீபத்தில் அறிக்கையை...

வீட்டுச் செலவுகளைப் பொறுத்தவரை விக்டோரியாவை விட 5 மாநிலங்கள் முன்னிலை

ஆஸ்திரேலியர்களின் வீட்டுச் செலவு மேலும் 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் 4 முக்கிய வகைகளின் கீழ் அவுஸ்திரேலியர்களின் உள்நாட்டுச் செலவு அதிகரித்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி,...

விக்டோரியன் குடும்பங்களுக்கு $400 மானியம் வழங்க முடிவு

2024ஆம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 700,000 ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு...

ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயால் கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் என்னென்ன தெரியுமா?

ஹார்வர்டு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வின்படி, தினமும் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால், டிமென்ஷியாவால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். இந்த ஆய்வு 28 வயதுக்கு மேற்பட்ட 92,000...

உலகின் மிக நீளமான Baguette தயாரித்து பிரெஞ்சு பேக்கரி குழு சாதனை

பாரீஸ் நகரின் புறநகர்ப் பகுதியான சுரேஸ்னெஸில் 140.5 மீட்டர் (461 அடி) உயரத்தில் உலகின் மிக நீளமான Baguette-ஐ தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்...