Newsஅமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 மாணவர்கள் உட்பட 6 பேர்...

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 3 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

-

நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். 

அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் மூன்று மாணவர்களையும் மூன்று பெரியவர்களையும் சுட்டுக் கொன்றுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய குறித்த நபரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நாஷ்வில் பகுதியைச் சேர்ந்த ஆட்ரி எலிசபெத் ஹேல் என்றும், அவர் ஒரு காலத்தில் அதே பள்ளியில் படித்தவர் என்றும் பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னதாக மழலையர் பள்ளி முதல் ஆறாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவர்கள் படிக்கும் பிரஸ்பைடிரியன் பள்ளியான தி கோவனன்ட் பள்ளியில் இந்த வன்முறை ஏற்பட்டது. 

கடந்த ஆண்டு டெக்சாஸ், உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த படுகொலை உட்பட, நாடு முழுவதும் உள்ள சமூகங்கள் பள்ளி வன்முறைகளின் தொடர்ச்சியால் தத்தளித்து வரும் நிலையில் இந்த கொலைகள் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விர்ஜின் ஆஸ்திரேலியாவில் இருந்து விடுமுறைக்கு ஒரு சிறந்த வாய்ப்பு

விர்ஜின் ஆஸ்திரேலியா தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான விமான விருப்பங்களை வழங்குவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி, 27 ஆம் திகதி நள்ளிரவு...

விக்டோரியாவில் கார் காப்பீட்டு செலவுகள் அதிகரிப்பதற்கான காரணங்கள்

விக்டோரியாவின் மெல்பேர்ணில் தொடர்ந்து வாகனத் திருட்டுகள் நடப்பதால் வாகன காப்பீட்டு விகிதங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெல்பேர்ண் காப்பீட்டு நிறுவனங்களில் மோட்டார் காப்பீட்டு கோரிக்கைகள் கடந்த ஆண்டை விட...

ராணுவ விமான விபத்து தொடர்பாக ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ள சீனா

தென் சீனக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய P-8 கண்காணிப்பு விமானத்தின் மீது சீன PLA Su-35 போர் விமானம் ஒன்று தீப்பிடித்து...

காலியான அலமாரிகளுடன் காட்சியளிக்கும் பல்பொருள் அங்காடிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள Woolworths மற்றும் Coles பல்பொருள் அங்காடிகளின் அலமாரிகளில் உருளைக்கிழங்கு பற்றாக்குறை இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து நுகர்வோர் மத்தியில்...

ராணுவ விமான விபத்து தொடர்பாக ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ள சீனா

தென் சீனக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய P-8 கண்காணிப்பு விமானத்தின் மீது சீன PLA Su-35 போர் விமானம் ஒன்று தீப்பிடித்து...

மெல்பேர்ணில் திடீரென மூடப்படும் பல உணவகங்கள்

மெல்பேர்ண் நகர மையத்தில் உள்ள பிரபலமான "Tokyo ramen" உணவகம் உட்பட பல உணவகங்கள் வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய மின்னஞ்சலைப் பெற்றதை அடுத்து மூடப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான...