Articleபிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா...யார் இவர் ?

பிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா…யார் இவர் ?

-

பிரிஸ்பேனில் வரும் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் சிலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாடகர் ஸ்ரீதர் சேனா பங்கேற்று, பிரிஸ்பேன் ரசிகர்களுக்கு இன்னிசை விருந்து படைக்க உள்ளார். யார் இந்த ஸ்ரீதர் சேனா என்பதை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். கடந்த ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கள் சீசன் 8 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டிலை வென்றவர் தான் இந்த ஸ்ரீதர் சேனா. முன்னதாக சூப்பர் சிங்கர் சீசன் 8 ன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றியாளரான ஸ்ரீதர் சேனாவிற்கு தனது கைகளாலேயே வெற்றி கோப்பையை வழங்கினார் இசையமைப்பாளர் அனிருத்.

ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஸ்ரீதர் சேனாவை, தான் இசையமைத்து, கதாநாயகனாக நடித்த அன்பறிவு என்ற படத்தில் பாடகராக அறிமுகம் செய்து வைத்தார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இருந்தாலும் ஸ்ரீதர் சேனா விரைவில் அனிருத்தின் இசையில் ஒரு பாடல் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

திரும்பப் பெறப்படும் Coles-இல் விற்கப்பட்ட பல பிரபலமான தயாரிப்புகள்

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பல வகையான கீரை வகைகளை திரும்பப் பெற Coles நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் 20 முதல் மார்ச் 29 வரை Coles-இல் விற்கப்பட்ட...

விலையை உயர்த்தும் பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பல்பொருள் அங்காடிகள் விலையை உயர்த்துவதற்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று (30) அறிவித்தார். அது கான்பெராவில் அவரது தேர்தல்...

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு குயின்ஸ்லாந்தைத் தாக்கிய மிக மோசமான வெள்ளம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தைப் பாதிக்கும் வெள்ள நிலைமையானது ஆபத்தான நிலையை எட்டுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, மாநிலத்திற்கு வெளியே உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான...

பிரதமர் அல்பானீஸ் மற்றும் பீட்டர் டட்டனுக்கு சிறப்பு பாதுகாப்பு

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் இருவரும் ஐந்து...

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு குயின்ஸ்லாந்தைத் தாக்கிய மிக மோசமான வெள்ளம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தைப் பாதிக்கும் வெள்ள நிலைமையானது ஆபத்தான நிலையை எட்டுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, மாநிலத்திற்கு வெளியே உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான...

பிரதமர் அல்பானீஸ் மற்றும் பீட்டர் டட்டனுக்கு சிறப்பு பாதுகாப்பு

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் இருவரும் ஐந்து...