Newsஇனி செத்து செத்து விளையாடலாம் – மரணத்தின் அனுபவத்தைத் தரும் புதிய...

இனி செத்து செத்து விளையாடலாம் – மரணத்தின் அனுபவத்தைத் தரும் புதிய தொழில்நுட்பம்

-

மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது, அவுஸ்திரேலியாவில் ஒரு புதிய மெய்நிகர் செயன்முறை (virtual reality simulation) மக்களுக்கு மரணத்தின் போது ஏற்படும் அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது.

அவுஸ்திரேலியாவில் மெய்நிகர் செயன்முறை (virtual reality simulation) என்ற புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மரணம் எப்படி இருக்கும் என்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது, மேலும் மக்கள் மரணத்தின் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது.

ஷான் கிளாட்வெல் என்பவர் பொஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் என்ற வேர்ச்சுவல் ரியாலிட்டி அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இறப்பு நெருங்கும் போது எப்படி இருக்கும் என்ற உணர்வை கொடுக்கிறது.

இதில் ஈடுபடுபவர்களுக்கு இதயத் துடிப்பு நிற்பது முதல் மூளை இறப்பு வரையிலான மரணத்தின் போது ஏற்படும் உணர்வை கொடுக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் இதயத் துடிப்பைச் சரிபார்க்க, நீங்கள் ஒரு தற்காலிக மருத்துவமனை படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும். வேர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தைப் பெறும் நபர்கள் ஹார்ட் மொனிட்டருடன் இணைக்கப்படுவர் மேலும் அவர்கள் மிகவும் சங்கடமாக இருந்தால் எந்த நேரத்திலும் வெளியேறலாம். உங்கள் உதவிக்கு மருத்துவ ஊழியர்கள் இருப்பர்.

உடல்முழுவதும் கடந்து செல்லும் மின்சாரப் புயல் அனுபவம், உடலுக்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள பிரபஞ்சங்களைப் பற்றிய சிந்தனையைத் தருகிறது.

மெல்போர்னைச் சேர்ந்தவரும் கண்காட்சியாளருமான மார்கஸ் க்ரூக், வேர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தில் மரண அனுபவம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறார்.

இதுகுறித்து டிக்டொக்கில் வெளியிடபட்ட வீடியோவில், “மரணம் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது, இதனை உணர்ந்த மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

அவர்கள் இதயத் துடிப்பு மொனிட்டரில் உங்கள் விரலை வைத்துவிட்டு, உங்கள் கையை உயர்த்தச் சொல்கிறார்கள். மரணம் நெருங்குவது குறித்த வேர்ச்சுவல் ரியாலிட்டி என்பது மரணத்திற்கு அருகில் செல்லும் அனுபவம் என கூறி உள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...