Newsஇனி செத்து செத்து விளையாடலாம் – மரணத்தின் அனுபவத்தைத் தரும் புதிய...

இனி செத்து செத்து விளையாடலாம் – மரணத்தின் அனுபவத்தைத் தரும் புதிய தொழில்நுட்பம்

-

மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது, அவுஸ்திரேலியாவில் ஒரு புதிய மெய்நிகர் செயன்முறை (virtual reality simulation) மக்களுக்கு மரணத்தின் போது ஏற்படும் அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது.

அவுஸ்திரேலியாவில் மெய்நிகர் செயன்முறை (virtual reality simulation) என்ற புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மரணம் எப்படி இருக்கும் என்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது, மேலும் மக்கள் மரணத்தின் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது.

ஷான் கிளாட்வெல் என்பவர் பொஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் என்ற வேர்ச்சுவல் ரியாலிட்டி அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இறப்பு நெருங்கும் போது எப்படி இருக்கும் என்ற உணர்வை கொடுக்கிறது.

இதில் ஈடுபடுபவர்களுக்கு இதயத் துடிப்பு நிற்பது முதல் மூளை இறப்பு வரையிலான மரணத்தின் போது ஏற்படும் உணர்வை கொடுக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் இதயத் துடிப்பைச் சரிபார்க்க, நீங்கள் ஒரு தற்காலிக மருத்துவமனை படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும். வேர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தைப் பெறும் நபர்கள் ஹார்ட் மொனிட்டருடன் இணைக்கப்படுவர் மேலும் அவர்கள் மிகவும் சங்கடமாக இருந்தால் எந்த நேரத்திலும் வெளியேறலாம். உங்கள் உதவிக்கு மருத்துவ ஊழியர்கள் இருப்பர்.

உடல்முழுவதும் கடந்து செல்லும் மின்சாரப் புயல் அனுபவம், உடலுக்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள பிரபஞ்சங்களைப் பற்றிய சிந்தனையைத் தருகிறது.

மெல்போர்னைச் சேர்ந்தவரும் கண்காட்சியாளருமான மார்கஸ் க்ரூக், வேர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தில் மரண அனுபவம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறார்.

இதுகுறித்து டிக்டொக்கில் வெளியிடபட்ட வீடியோவில், “மரணம் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது, இதனை உணர்ந்த மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

அவர்கள் இதயத் துடிப்பு மொனிட்டரில் உங்கள் விரலை வைத்துவிட்டு, உங்கள் கையை உயர்த்தச் சொல்கிறார்கள். மரணம் நெருங்குவது குறித்த வேர்ச்சுவல் ரியாலிட்டி என்பது மரணத்திற்கு அருகில் செல்லும் அனுபவம் என கூறி உள்ளார்.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...