Newsஆஸ்திரேலியாவின் முதியவர்களில் 80% பேர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாக தகவல்

ஆஸ்திரேலியாவின் முதியவர்களில் 80% பேர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாக தகவல்

-

அவுஸ்திரேலியாவின் முதியோர்களில் 80 வீதமானோர் வாழ்க்கைச் செலவில் விரைவான அதிகரிப்பு காரணமாக கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அடுத்த 12 மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா முழுவதையும் உள்ளடக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வயதுக்கு மேற்பட்ட 5,700 பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள், எரிபொருள் உள்ளிட்ட எரிசக்திக் கட்டணங்கள், சுகாதாரச் செலவுகள் என்பன முக்கியப் பிரச்சினைகளாக இருப்பதுடன் வீட்டுப் பிரச்சினையும் கவனம் செலுத்த வேண்டிய விடயம் என கணக்கெடுப்பில் பங்களித்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொலைதூர பிரதேசங்களில் வசிக்கும் மக்களும், குறைந்த வருமானம் கொண்டவர்களும் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை அதிகரிக்காமல் காலாண்டுக்கு ஒருமுறை அதாவது வருடத்திற்கு 04 முறை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...