Newsபைக்கில் 300 கி.மீ. வேகத்தில் பயணித்த பிரபல யூடியூபர் அகஸ்ட்யா உயிரிழப்பு

பைக்கில் 300 கி.மீ. வேகத்தில் பயணித்த பிரபல யூடியூபர் அகஸ்ட்யா உயிரிழப்பு

-

இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த பிரபல யூடியூபர் அகஸ்ட்யா சவுகான் விலை உயர்ந்த பைக்கில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் அகஸ்ட்யா சவுகான். 25 வயதான இவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை பற்றி ரிவியூவ் செய்வதோடு, மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்யும் வீடியோக்களை ‘புரோ ரைடர் 1000’ என்ற யூடியூப் சனலில் பதிவிட்டுவந்தார். இவரது யூடியூப் சானல் 12 லட்சம் பார்வையாளர்களை கொண்டிருந்தது.

இந்நிலையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஆயிரம் சிசி திறன்கொண்ட கவாசாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் என்ற பைக்கின் முழு வேகத்தையும் சோதித்து பார்க்க முடிவு செய்தார் அகஸ்ட்யா . இதற்காக கடந்த புதன்கிழமை, யமுனா விரைவுச் சாலையில் ஆக்ராவில் இருந்து டெல்லியை நோக்கி பயணித்தார் அகஸ்ட்யா .

இதனை வீடியோவாக பதிவுசெய்து தனது சேனலில் பதிவிடுவதற்கான பணிகளை மேற்கொண்டபடி பைக்கை இயக்கினார். செல்லும் வழியில் பைக்கில் பயணித்த மற்ற வாகன ஓட்டிகளிடம் பேசியவாறும், அவர்களை தன்னைவிட அதிக வேகத்தில் செல்லுமாறும் கூறியபடி சென்றார். பின்னர் அவர்களை விட மின்னல் வேகத்தில் பறப்பதுமாக ரன்னிங் கமென்ட்ரி கூறியவாறே பைக்கை ஒட்டிச்சென்றார்.

வெறும் 3 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தையும், அடுத்த 10 வினாடிக்குள் 200 கிலோ மீட்டர் வேகத்தையும் எட்டும் திறன் கொண்ட இந்த பைக்கில் 47-வது மைல் பொயின்ட் என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த அகஸ்ட்யா , தற்போது 300 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட உள்ளதாக தெரிவித்தார். அப்போது, பைக்கை கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறி சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதினார்.

மோதிய வேகத்தில் பைக் தூக்கிவீசப்பட்டது. அவர் அணிந்திருந்த ஹெல்மெட் பல துண்டுகளாக உடைந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த அகஸ்ட்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யூடியூபர் ஓட்டிக்கொண்டிருந்த கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் பைக் மணிக்கு சுமார் 300 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது..மேலும் 200 பிஎஸ் ஆற்றலையும் 115 எம்எம் முறுக்குவிசையையும் வெளிப்படுத்தக்கூடிய இன்லைன் நான்கு எஞ்சினுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 207 கிலோ எடை கொண்டது. சாதாரணமான 125முதல் 150 சிசி திறன் கொண்ட பைக்குகளைவிட சுமார் 15 மடங்கு திறன் கொண்டது கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர். மேலும் இந்தியாவில் வழக்கமான செடானை விட இரண்டு மடங்கு திறன் கொண்டது.

இந்த பைக் அதிவேகத்தில் செல்லக்கூடியது. இதில் 0-100 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள் மற்றும் 0-200 கி.மீ. வேகத்தை வெறும் 10 வினாடிகளில் துரிதப்படுத்த முடியும்.இந்த பைக்கை பொது சாலைகளில் அனுபவம் வாய்ந்த ரைடர்கள் கையாள்வது கூட மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது.

கடைசி வீடியோவில்…:

அகஸ்தய் தனது சானலில் பதிவேற்றிய கடைசி வீடியோவில், நான் டெல்லிக்குச் செல்கிறேன், அங்கு பைக்கில் எவ்வளவு வேகமாக செல்ல முடியும் என்பதை சரிபார்க்கப் போகிறேன். இதற்காக பைக்கை 300 கிலோ மீட்டர் வேகத்தில் எடுத்துச் செல்கிறேன், அதைத் தாண்டிச் செல்ல முடியுமா என்று பார்க்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...