Newsபைக்கில் 300 கி.மீ. வேகத்தில் பயணித்த பிரபல யூடியூபர் அகஸ்ட்யா உயிரிழப்பு

பைக்கில் 300 கி.மீ. வேகத்தில் பயணித்த பிரபல யூடியூபர் அகஸ்ட்யா உயிரிழப்பு

-

இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த பிரபல யூடியூபர் அகஸ்ட்யா சவுகான் விலை உயர்ந்த பைக்கில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் அகஸ்ட்யா சவுகான். 25 வயதான இவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை பற்றி ரிவியூவ் செய்வதோடு, மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்யும் வீடியோக்களை ‘புரோ ரைடர் 1000’ என்ற யூடியூப் சனலில் பதிவிட்டுவந்தார். இவரது யூடியூப் சானல் 12 லட்சம் பார்வையாளர்களை கொண்டிருந்தது.

இந்நிலையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஆயிரம் சிசி திறன்கொண்ட கவாசாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் என்ற பைக்கின் முழு வேகத்தையும் சோதித்து பார்க்க முடிவு செய்தார் அகஸ்ட்யா . இதற்காக கடந்த புதன்கிழமை, யமுனா விரைவுச் சாலையில் ஆக்ராவில் இருந்து டெல்லியை நோக்கி பயணித்தார் அகஸ்ட்யா .

இதனை வீடியோவாக பதிவுசெய்து தனது சேனலில் பதிவிடுவதற்கான பணிகளை மேற்கொண்டபடி பைக்கை இயக்கினார். செல்லும் வழியில் பைக்கில் பயணித்த மற்ற வாகன ஓட்டிகளிடம் பேசியவாறும், அவர்களை தன்னைவிட அதிக வேகத்தில் செல்லுமாறும் கூறியபடி சென்றார். பின்னர் அவர்களை விட மின்னல் வேகத்தில் பறப்பதுமாக ரன்னிங் கமென்ட்ரி கூறியவாறே பைக்கை ஒட்டிச்சென்றார்.

வெறும் 3 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தையும், அடுத்த 10 வினாடிக்குள் 200 கிலோ மீட்டர் வேகத்தையும் எட்டும் திறன் கொண்ட இந்த பைக்கில் 47-வது மைல் பொயின்ட் என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த அகஸ்ட்யா , தற்போது 300 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட உள்ளதாக தெரிவித்தார். அப்போது, பைக்கை கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறி சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதினார்.

மோதிய வேகத்தில் பைக் தூக்கிவீசப்பட்டது. அவர் அணிந்திருந்த ஹெல்மெட் பல துண்டுகளாக உடைந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த அகஸ்ட்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யூடியூபர் ஓட்டிக்கொண்டிருந்த கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் பைக் மணிக்கு சுமார் 300 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது..மேலும் 200 பிஎஸ் ஆற்றலையும் 115 எம்எம் முறுக்குவிசையையும் வெளிப்படுத்தக்கூடிய இன்லைன் நான்கு எஞ்சினுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 207 கிலோ எடை கொண்டது. சாதாரணமான 125முதல் 150 சிசி திறன் கொண்ட பைக்குகளைவிட சுமார் 15 மடங்கு திறன் கொண்டது கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர். மேலும் இந்தியாவில் வழக்கமான செடானை விட இரண்டு மடங்கு திறன் கொண்டது.

இந்த பைக் அதிவேகத்தில் செல்லக்கூடியது. இதில் 0-100 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள் மற்றும் 0-200 கி.மீ. வேகத்தை வெறும் 10 வினாடிகளில் துரிதப்படுத்த முடியும்.இந்த பைக்கை பொது சாலைகளில் அனுபவம் வாய்ந்த ரைடர்கள் கையாள்வது கூட மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது.

கடைசி வீடியோவில்…:

அகஸ்தய் தனது சானலில் பதிவேற்றிய கடைசி வீடியோவில், நான் டெல்லிக்குச் செல்கிறேன், அங்கு பைக்கில் எவ்வளவு வேகமாக செல்ல முடியும் என்பதை சரிபார்க்கப் போகிறேன். இதற்காக பைக்கை 300 கிலோ மீட்டர் வேகத்தில் எடுத்துச் செல்கிறேன், அதைத் தாண்டிச் செல்ல முடியுமா என்று பார்க்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

பெண்களுக்கான பணிக்குத் திரும்பும் குயின்ஸ்லாந்து அரசாங்க நிதிகள்

பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புர்காவை தடை செய்வதற்கான திட்டம்

பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். அவர்...

ஆஸ்திரேலியாவின் நம்பகமான நண்பராக மாற அமெரிக்கா தயார்

ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...

ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய தளங்களுக்கு என்ன நடக்கிறது?

ஆஸ்திரேலியாவில் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்ட நான்கு இயற்கை தளங்களின் நிலை 2020 முதல் குறைந்துள்ளது. இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகள் குறைந்துவிட்டன என்பதை சர்வதேச இயற்கை...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில் (ACOSS) நடத்திய...

Qantas ஹேக்கர்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவு

Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...