Newsஉக்ரைனில் உச்சக்கட்ட போர் பதற்றம் - ஜெர்மனி சான்ஸ்லர் எடுத்துள்ள தீர்மானம்

உக்ரைனில் உச்சக்கட்ட போர் பதற்றம் – ஜெர்மனி சான்ஸ்லர் எடுத்துள்ள தீர்மானம்

-

உக்ரைன் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகின்ற நிலையில் ஜெர்மனி சான்ஸ்லர் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரான், ஜெர்மனி சான்ஸ்லர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் எதிர்வரும் 16ஆம் திகதி உக்ரைன் தலைநகர் கீவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

3 ஐரோப்பிய தலைவர்களும் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்து உக்ரைன் துறைமுகங்களில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி போரை தொடங்கிய ரஷ்யா தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சித்தது.

ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் ரஷிய படைகளின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதை தொடர்ந்து ரஷியா தனது கவனத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியம் மீது திருப்பியது. முந்தைய தவறான செயல்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ரஷ்ய படைகள் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதில் துல்லியமான தாக்குதல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறான சூழலில் இந்த தலைவர்கள் உக்ரைன் செல்ல திட்டமிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

Latest news

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

240 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, பல வருட மோசடிக்காக விதிக்கப்பட்ட $240 மில்லியன் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நான்கு தனித்தனி நடவடிக்கைகள் தொடர்பாக ANZ...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

மெல்பேர்ணில் மணிக்கு 225km வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நேற்று காலை மெல்பேர்ணில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் பறிமுதல்...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...