Newsஆஸ்திரேலியா மீதான தடைகளைச் சீனா அகற்றவேண்டும் - பிரதமர் கோரிக்கை

ஆஸ்திரேலியா மீதான தடைகளைச் சீனா அகற்றவேண்டும் – பிரதமர் கோரிக்கை

-

ஆஸ்திரேலியாமீது விதிக்கப்பட்ட தடைகளைச் சீனா அகற்றவேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுடன் உறவுகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவாண்டுகளில் முதன்முறையாகச் சந்தித்துப் பேசியது நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகயும், இரும்பு தாதுப் பொருள்களை வாங்கும் முக்கிய வாடிக்கையாளருமாகச் சீனா விளங்குகிறது.

இருப்பினும் அண்மை ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவு நன்றாக இல்லை. ஆஸ்திரேலியாவுடன் ஏற்பட்டுள்ள 14 சர்ச்சைகளைக் காரணங்காட்டி சீனா அதன்மீது தடைகளை விதித்தது.

கொரோனா நோய்ப்பரவலின் ஆரம்பம் குறித்து சீனாவில் விசாரணை மேற்கொள்ளும்படி ஆஸ்திரேலியா கோரியதும், தேசியப் பாதுகாப்புக்காக வெளிநாட்டு முதலீடுகளைச் சோதனைக்கு உட்படுத்தியதும் அந்தச் சர்ச்சைகளில் அடங்கும்.

நேற்று முன்தினம் (ஜூன் 12) ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மைல்ஸ் (Richard Marles), சீனத் தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்ஹவை (Wei Fenghe), Shangri-La கலந்துரையாடலில் சந்தித்துப் பேசியிருந்தார்.

ஒரு மணிநேரம் நீடித்த அந்த உரையாடல், ஒரு முக்கிய முதற்படி என்று மைல்ஸ் தெரிவித்துள்ளார்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...