Newsஆஸ்திரேலியா மீதான தடைகளைச் சீனா அகற்றவேண்டும் - பிரதமர் கோரிக்கை

ஆஸ்திரேலியா மீதான தடைகளைச் சீனா அகற்றவேண்டும் – பிரதமர் கோரிக்கை

-

ஆஸ்திரேலியாமீது விதிக்கப்பட்ட தடைகளைச் சீனா அகற்றவேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுடன் உறவுகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவாண்டுகளில் முதன்முறையாகச் சந்தித்துப் பேசியது நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகயும், இரும்பு தாதுப் பொருள்களை வாங்கும் முக்கிய வாடிக்கையாளருமாகச் சீனா விளங்குகிறது.

இருப்பினும் அண்மை ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவு நன்றாக இல்லை. ஆஸ்திரேலியாவுடன் ஏற்பட்டுள்ள 14 சர்ச்சைகளைக் காரணங்காட்டி சீனா அதன்மீது தடைகளை விதித்தது.

கொரோனா நோய்ப்பரவலின் ஆரம்பம் குறித்து சீனாவில் விசாரணை மேற்கொள்ளும்படி ஆஸ்திரேலியா கோரியதும், தேசியப் பாதுகாப்புக்காக வெளிநாட்டு முதலீடுகளைச் சோதனைக்கு உட்படுத்தியதும் அந்தச் சர்ச்சைகளில் அடங்கும்.

நேற்று முன்தினம் (ஜூன் 12) ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மைல்ஸ் (Richard Marles), சீனத் தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்ஹவை (Wei Fenghe), Shangri-La கலந்துரையாடலில் சந்தித்துப் பேசியிருந்தார்.

ஒரு மணிநேரம் நீடித்த அந்த உரையாடல், ஒரு முக்கிய முதற்படி என்று மைல்ஸ் தெரிவித்துள்ளார்.

Latest news

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...

மேற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு தீ வைத்த நபர்

மேற்கு ஆஸ்திரேலிய குழந்தை பராமரிப்பு மையம் தீப்பிடித்து எரிந்ததில், $500,000 மதிப்புள்ள சேதம் ஏற்பட்டதை அடுத்து, ஒருவர் மீது தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை...

சுகாதார நிதி பிரச்சினை குறித்து விவாதிக்க கூடும் மாநில அரசுகள்

பொது மருத்துவமனை நிதி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இப்போது தனது பொறுப்புகளைக் குறைத்து, அரசு...

Black Friday தள்ளுபடிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!

Black Friday விற்பனையுடன் வரும் போலி ஒப்பந்தங்கள் மற்றும் ஏமாற்றும் விளம்பரங்கள் குறித்து ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறாக வழிநடத்தும்...

மெல்பேர்ண் குழந்தைகள் மையத்தில் தாக்குதல் – தாய் மீது வழக்கு விசாரணை

மெல்பேர்ணில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் தனது ஊனமுற்ற குழந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்து, ஒரு தாய் குற்றவியல்...

சுகாதார நிதி பிரச்சினை குறித்து விவாதிக்க கூடும் மாநில அரசுகள்

பொது மருத்துவமனை நிதி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இப்போது தனது பொறுப்புகளைக் குறைத்து, அரசு...