Sportsகுஜராத்தை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் -...

குஜராத்தை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் – IPL 2023

-

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை அணி, குஜராத்தை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தார். 36 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே ஒரு ஓட்டங்களுடன் வெளியேறினார். ரகானே 17 ஓட்டங்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தேவன் கான்வே, 40 ஓட்டங்களுடன் விக்கெட்டை இழந்தார்.

அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 125 ஆக இருந்தது.

ரகானே, அம்பதி ராயுடு தலா 17 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தனர். 19வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த அணி தலைவர் டோனி 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரது அதிரடி பேட்டிங்கை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதன்பின் ஜடேஜா 22 ஓட்டங்கள், மொயீன் அலி 9 ஓட்டங்கள் (நொட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை சேர்த்தது.

குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தர்ஷன், ரஷித் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது.

 இதில், சுப்மன் கில் அதிகபட்மாக 42 ஓட்டங்களை எடுத்தார். தொடர்ந்து, ஷனக்கா 17 ஓட்டங்களும், சாஹா 12 ஓட்டங்களும், விஜய் சங்கர் 14 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 8 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 4 ஓட்டங்களும், ராகுல் திவாடியா 3 ஓட்டங்களும் எடுத்தனர். 

ராஷித் கான் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். நூர் அகமது 7 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 19வது ஓவரில் 9 விக்கெட்டுகளுடன் குஜராத் அணி 146 ஓட்டங்களை எடுத்திருந்தது. இன்னும் 6 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது.

 இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை எடுத்து குஜராத் அணி தோல்வியடைந்தது.

 இதன் மூலம், முதன்முறையாக குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது

நன்றி தமிழன்

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...