Sportsகுஜராத்தை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் -...

குஜராத்தை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் – IPL 2023

-

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை அணி, குஜராத்தை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தார். 36 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே ஒரு ஓட்டங்களுடன் வெளியேறினார். ரகானே 17 ஓட்டங்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தேவன் கான்வே, 40 ஓட்டங்களுடன் விக்கெட்டை இழந்தார்.

அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 125 ஆக இருந்தது.

ரகானே, அம்பதி ராயுடு தலா 17 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தனர். 19வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த அணி தலைவர் டோனி 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரது அதிரடி பேட்டிங்கை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதன்பின் ஜடேஜா 22 ஓட்டங்கள், மொயீன் அலி 9 ஓட்டங்கள் (நொட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை சேர்த்தது.

குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தர்ஷன், ரஷித் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது.

 இதில், சுப்மன் கில் அதிகபட்மாக 42 ஓட்டங்களை எடுத்தார். தொடர்ந்து, ஷனக்கா 17 ஓட்டங்களும், சாஹா 12 ஓட்டங்களும், விஜய் சங்கர் 14 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 8 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 4 ஓட்டங்களும், ராகுல் திவாடியா 3 ஓட்டங்களும் எடுத்தனர். 

ராஷித் கான் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். நூர் அகமது 7 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 19வது ஓவரில் 9 விக்கெட்டுகளுடன் குஜராத் அணி 146 ஓட்டங்களை எடுத்திருந்தது. இன்னும் 6 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது.

 இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை எடுத்து குஜராத் அணி தோல்வியடைந்தது.

 இதன் மூலம், முதன்முறையாக குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...