Newsஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கும் தீவிர முயற்சியில் இலங்கையர்கள் - விடுக்கப்பட்டு அவசர எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கும் தீவிர முயற்சியில் இலங்கையர்கள் – விடுக்கப்பட்டு அவசர எச்சரிக்கை

-

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோதக் இடப்பெயர்வாளர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையர்கள் சிலர் படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இவர்களில் பெரும்பாலானோர் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டில் நிலவும் பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஒவ்வொருவரிடமிருந்தும் 700,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை பணத்தை கடத்தல்காரர்கள் பெற்றுக்கொள்வதாகவும் படகிற்குள் ஏறியதும் கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு இடப்பெயர்வாளர்கள் குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

அதேபோல், சிறிய படகுகள் மூலம் கரையில் இருந்து நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகிற்கு இடப்பெயர்வாளர்களை அழைத்துச் செல்வதற்கு 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 15 இலங்கையர்கள் கடந்த தினம் ஆஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இருந்து படகுகள் மூலம் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது, கடத்தல் காரர்களே அவர்களை பாதுகாப்பு தரப்பினரிடம் காட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...