Newsஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத்...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

-

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து மலையில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றேன். எனினும் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எவரெஸ்ட் மலை சிகரத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதுக்குள் இருந்தாலும், அதனை சாத்தியப்படுத்த கடந்த காலங்களில் நான் கடுமையாக பாடுபட்டேன்.

கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் தினமான அன்று நாம் 8849 மீற்றர் உயரமான எவரெஸ்டின் சிகரத்தை அடைந்து அங்கு நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தேன் என துஷியந்தன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் விவேகானந்தன் துஷியந்தன் உள்நாட்டு போர் காரணமாக 13 வயதில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கை தமிழனும், இலங்கையைச் சேர்ந்த ஆணும் தானே எனக் கூறும் துஷியந்தன், இதற்கு முன்னர் மலேசிய தமிழர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளதாக கூறுகிறார்.

Latest news

Augathellaவின் நீர் விநியோக இடமான Charleville-ல் மூளையை உண்ணும் ஆபத்தான அமீபா கண்டுபிடிப்பு

தென்மேற்கு குயின்ஸ்லாந்து ஷையரின் குடிநீர் விநியோக நிலையத்தில் மூளையை உண்ணும் ஒரு அரிய மற்றும் ஆபத்தான அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Charleville மற்றும் Augathella-இற்கான குடிநீரில் Naegleria fowleri என்ற...

உணவுப் பொட்டலத்தில் எடையுடன் கூடிய e எழுத்து என்ன?

உணவுப் பொட்டலத்தில் உள்ள "e" சின்னம் (250 கிராம் e) அதன் எடையுடன் சேர்த்து, கேள்விக்குரிய பொருள் சரியான எடையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...