Newsஸ்தம்பிக்க போகும் இலங்கை - முழுமையாக முடங்கும் அபாயம்

ஸ்தம்பிக்க போகும் இலங்கை – முழுமையாக முடங்கும் அபாயம்

-

விரைவில் இலங்கை முழுமையாக மூடப்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுமையாக முடங்கும் அபாயம் காணப்படுவதாக கல்விசாரா சேவை சங்கம் அறிவித்துள்ளது.

கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, குறித்த சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரத்ன இதனைக் குறிப்பிட்டார்

எரிபொருள் கையிருப்பு குறைவாகவே காணப்படுவதாகவும், இதனால் அரச சேவையாளர்களுக்கு, கடமைகளுக்கு சமூகமளிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், கூடிய விரைவில் நாடு முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்

நாட்டை முடக்குவதாக அரசாங்கம் அறிவிக்காவிட்டாலும், தன்னிச்சையாகவே நாடு முடங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆட்சியாளர்களின் முறையற்ற தீர்மானங்களினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, கல்விசாரா சேவை சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரத்ன மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின், ஒரு மின் பிறப்பாக்கி கட்டமைப்பு எதிர்வரும் சனிக்கிழமை முதல் மூடப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது

பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாகவே மின் உற்பத்தி நிலையம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...