News“நான் நாடு திரும்பி என் தாயை பார்க்க வேண்டும்” - சாந்தன்...

“நான் நாடு திரும்பி என் தாயை பார்க்க வேண்டும்” – சாந்தன் எழுதிய கடிதம்

-

“32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை ” என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையை சேர்ந்த டி.சுதந்திரராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் நவம்பர் 11, 2022 அன்று இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சாந்தன், சிறப்பு முகாமுக்குள் தனது வாழ்க்கையைப் பற்றி கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதில் சூரிய ஒளி கூட எங்களின் உடலைத் தொடாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தனக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் தான் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதிய போதிலும் எதுவும் நடக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடையாளச் சான்றினை புதுப்பித்துக் கொள்ள சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை அணுகியதாகவும். ஆனால் அதற்கும் அவர்களிடம் இருந்து பதில் இல்லை என கூறியுள்ளார்.

கடந்த 6 மாதங்களாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். 120 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு முகாமில் வசிக்கின்றனர்,அவர்களில் 90 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறப்பு முகாமில் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. “ராஜீவ் காந்தி வழக்கில் விடுவிக்கப்பட்ட நாங்கள் நான்கு பேர், ஜன்னல்கள் தகர தாளால் மூடப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.

மேலும் , “ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஒரு அறையில் இருக்கும்போது, நானும் முருகனும் மற்றொரு அறையைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் எங்கள் அறைகள் ஒன்றுக்கொன்று அருகில் இல்லை. எங்களால் ஒருவரையொருவர் பேசவோ பழகவோ முடியாது.

இரத்த உறவினர்கள் மட்டுமே கைதிகளை சந்திக்க முடியும். “என்னைப் போன்ற ஒரு வெளிநாட்டவருக்கு, இந்தியாவில் இரத்த உறவினரை எப்படி இருக்கும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்களுக்கு அரசு நாள் ஒன்றுக்கு ரூ.175 வழங்கியதாக கூறினார்.

“32 வருடங்களாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை. எனது தந்தையின் கடைசி ஆண்டுகளில் என்னால் அவருடன் இருக்க முடியவில்லை. என் அம்மாவின் கடைசி நாட்களில் அவருடன் இருக்க வேண்டும் என்ற எனது ஆசை “என்று அவர் கடிதத்தில் எழுதினார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க புதிய வழி

விக்டோரியா மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய முறையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆன்லைனில் $85,000 வரை...

கிறிஸ்துமஸ் நேரத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய வேலைகள்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் 4.2 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த மாதம் மட்டும் சுமார் 65,000...

விக்டோரியாவில் இன்று இடியுடன் கூடிய மழை மற்றும் பனி பொழியும்

இன்று விக்டோரியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் பனி முன்னறிவிப்பு விக்டோரியாவில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்...

இன்று ஆஸ்திரேலியா வந்துள்ள மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா

மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இன்று ஆஸ்திரேலியா வந்துள்ளனர். முடிசூட்டு விழாவுக்குப் பிறகு அவர்களின் முதல் பெரிய வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், மேலும் அரச...

புதிய விண்வெளி பயணத்திற்கு தயாராகும் தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கூனிபா சோதனை மைதானத்தில் இருந்து முதல் விண்வெளி ராக்கெட்டை ஏவுவதற்கான ஒப்பந்தத்தில் சதர்ன் லாஞ்ச் கையெழுத்திட்டுள்ளது. உத்தேச புதிய திட்டம் குறித்து மத்திய...

சிட்னி துறைமுக பாலத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு

சிட்னி துறைமுக பாலத்தில் சிறிது நேரத்திற்கு முன் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பிற்பகல் 1.40 மணியளவில் மூன்று கார்களும் பஸ்ஸொன்றும் மோதிக்கொண்டதில் இந்த...