News700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி -...

700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி – ஜெர்மனி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

-

ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான பிளாக் டெத்-தின் தோற்றத்தைக் கண்டுபிடித்திருப்பதாக ஜெர்மனி விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆச்சர்யமான தகவலை ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் நிறுவனம், டூபிங்கன் பல்கலைக்கழகம் இணைந்து நேச்சர் இதழில் வெளியிட்டிருக்கின்றன.

இந்த ஆய்வு தொடர்பாக அந்த இதழில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில், “பிளாக் டெத் தொற்றுநோயை முதன்முதலில் பரப்பிய பாக்டீரியா மத்திய ஆசியாவின் நவீன கிர்கிஸ்தானில் உள்ள மூன்று கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் 1346 முதல் 1353 வரை புபோனிக் பிளேக் நோய் உலகின் பெரும் பகுதிகளில் அழிவை ஏற்படுத்தியது. சில இடங்களில் 60 சதவிகித மக்கள் இந்த நோயால் இறந்ததாக நம்பப்படுகிறது. இது தொடர்பான ஆய்வில், ஸ்டிர்லிங் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் டாக்டர் பிலிப் ஸ்லாவின், இசிக் குல் ஏரிக்கு அருகிலுள்ள சூ பள்ளத்தாக்கில் 1338, 1339-ம் ஆண்டுகளில் மூன்று கல்லறைகளைக் கண்டுபிடித்தார்.

அதைத் தொடர்ந்து அந்த மூன்று கல்லறைகளில் நெஸ்டோரியன் கிறிஸ்தவ சமூகத்தில் புதைக்கப்பட்ட மூன்று பெண்களின் பற்களிலிருந்து, யெர்சினியா பெஸ்டிஸ் பிளேக் பாக்டீரியாவின் முதல் டி.என்.ஏ தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் மீட்டெடுத்திருக்கின்றனர்.

அந்த டி.என்.ஏ-வை ஆய்வுசெய்தபோது, நோய்க் கிருமியின் மரபணு தன்னை மறுகட்டமைத்து அது பிளாக் டெத் எனும் தொற்றை ஏற்படுத்தியதையும், இன்று இருக்கும் பெரும்பாலான பிளேக் நோய்களுக்கும் அந்த நோய்க்கிருமியின் மரபணுதான் வழிவகுத்தது என்பதையும் கண்டுபிடித்திருக்கின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர், மற்றும் முதன்மை எழுத்தாளரான மரியா ஸ்பைரோ, ‘புபோனிக் பிளேக் மத்திய தரைக்கடல் முழுவதும் பழைய சில்க் ரோடு வர்த்தகப் பாதை வழியாகப் பரவியது. அதற்கு முன்பு 500 ஆண்டுகள் வரை நீடித்த கொடிய நோய்களின் அலையால், இது `இரண்டாவது பிளேக் தொற்றுநோய்’ என்று அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் ஐரோப்பாவில் பிளேக் பரவுவதற்கு வர்த்தகம் ஒரு முக்கியக் காரணியாக இருந்தது என்பது ஆய்வில் தெரியவந்தது.

Latest news

இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய குற்றத்திற்காக இங்கிலாந்து பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கொலை...

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர $925 மில்லியன்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமைத் திட்டத்தை நிறுவுவதற்கு $925 மில்லியன் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன்முறைக்கு உள்ளாகும்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

அவுஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வன்முறையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார் அரசர் சார்லஸ்

கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசர் சார்லஸ் நேற்று (30) மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். அது, ராணி கமிலாவுடன் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்குச்...