NewsAI தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்த Google

AI தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்த Google

-

தொழில்நுட்ப உலகின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக ChatGPT தொழில்நுட்பம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தொழில்நுட்ப நிறுவனத்திற்கு போட்டியாக சாட்போட், மைக்ரோசாப்ட் என அடுத்தடுத்து நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. கூகுள் நிறுவனம் பார்ட் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

AI தொழில்நுட்பம் பல தகவல்களை சேமித்து வைத்திருப்பது மட்டுமில்லாமல் பயனர்களுக்கு ஏற்றவாறு அதனை அமைத்து தரக்கூடியது.

ஊழியர்கள் சிலர் இணைந்துதான் ஒரு வெப்சைட் உருவாக்க இயலும் என்ற நிலைமாறி, நாம் AI தொழில்நுட்பம் வாயிலாக இதனை உருவாக்கிக் கொள்ளும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்காக அமைத்தாலும் பல வேலை நீக்கங்களும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் AI தொழில்நுட்பத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி AI தொழில்நுட்பத்தில் நம்பிக்கை மிகுந்த தகவல்களை பரிமாறும்போது அவை வெளியாவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும், AI வாங்கும் தகவல்களை அது நகலாக வெளியிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் சாட்ஜிபிடி, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் பல பில்லியன் கணக்கில் டாலர்களை AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளன.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஊழியர்களை கூகுள் அறிவுறுத்துகிறது என தெரிவித்துள்ளது.

உலகில் எண்ணற்ற நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளன. சாம்சங், அமேசான், டாட்சே வங்கி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை சில வரையறைகளுடன் பயன்படுத்தி வருகின்றன.

உலகெங்கிலும் 43 சதவீத பணியாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தெரியாமல் கடந்த ஜனவரி மாதத்தில் சாட்ஜிபிடி மற்றும் இதர ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...