NewsAI தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்த Google

AI தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்த Google

-

தொழில்நுட்ப உலகின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக ChatGPT தொழில்நுட்பம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தொழில்நுட்ப நிறுவனத்திற்கு போட்டியாக சாட்போட், மைக்ரோசாப்ட் என அடுத்தடுத்து நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. கூகுள் நிறுவனம் பார்ட் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

AI தொழில்நுட்பம் பல தகவல்களை சேமித்து வைத்திருப்பது மட்டுமில்லாமல் பயனர்களுக்கு ஏற்றவாறு அதனை அமைத்து தரக்கூடியது.

ஊழியர்கள் சிலர் இணைந்துதான் ஒரு வெப்சைட் உருவாக்க இயலும் என்ற நிலைமாறி, நாம் AI தொழில்நுட்பம் வாயிலாக இதனை உருவாக்கிக் கொள்ளும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்காக அமைத்தாலும் பல வேலை நீக்கங்களும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் AI தொழில்நுட்பத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி AI தொழில்நுட்பத்தில் நம்பிக்கை மிகுந்த தகவல்களை பரிமாறும்போது அவை வெளியாவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும், AI வாங்கும் தகவல்களை அது நகலாக வெளியிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் சாட்ஜிபிடி, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் பல பில்லியன் கணக்கில் டாலர்களை AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளன.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஊழியர்களை கூகுள் அறிவுறுத்துகிறது என தெரிவித்துள்ளது.

உலகில் எண்ணற்ற நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளன. சாம்சங், அமேசான், டாட்சே வங்கி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை சில வரையறைகளுடன் பயன்படுத்தி வருகின்றன.

உலகெங்கிலும் 43 சதவீத பணியாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தெரியாமல் கடந்த ஜனவரி மாதத்தில் சாட்ஜிபிடி மற்றும் இதர ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

நடந்து வரும் விலைப் போரில் Coles-இற்கு எதிராக Woolworths-இன் புதிய திட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 100 தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்போவதாக Woolworths அறிவித்துள்ளது. இது சூப்பர் மார்க்கெட் போட்டியாளரான Coles-இற்கு எதிரான புதிய அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Pasta...

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...