Newsபாகிஸ்தான் சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்

பாகிஸ்தான் சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்

-

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கைதிகள் பலர் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

ஆனால் கைதிகள் சிலர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தப்பிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி தொழுகை நடைபெற்ற சமயத்தில் சில கைதிகள் சிறையில் இருந்து ஏறி குதித்து தப்பிக்க முயற்சி செய்தனர்.

இதனையறிந்த சிறை காவலர்கள் அவர்களை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனால் சிறை காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் நடந்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.

மேலும் காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு கைதி உயிரிழந்தார்.

இதற்கிடையே இந்த குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். அவர்கள் தப்பி செல்வதற்கு வெளியில் இருந்து சிலர் உதவி உள்ளனர்.

தப்பி ஓடிய கைதிகளில் சிலர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சமன் சிறைச்சாலையானது ஈரான் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது.

எனவே நண்பர்களின் உதவியுடன் இவர்கள் அங்கு தப்பி ஓடி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்காக சிறையில் இருந்து தப்பிய கைதிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மீது சைபர் தாக்குதல்

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குறியீட்டு நூலகத்தை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். செப்டம்பர் 4, 2018 நிலவரப்படி...