Newsவெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு - அமெரிக்காவில் பரபரப்பு

வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு – அமெரிக்காவில் பரபரப்பு

-

அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகை, உச்சகட்ட பாதுகாப்பை கொண்டுள்ள கட்டிடமாகும். அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், நேற்று இரவு சுமார் 8.45 மணியளவில் வெள்ளை மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தாக்குதலுக்கான வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

குறித்த சமயத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. முன் எச்சரிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதையடுத்து உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்தனர். அந்த மர்ம பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்பு துறை உறுதிப்படுத்தியது.

பின்னர் அந்த மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் அது கோகெய்ன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...