Newsவிமானப் போக்குவரத்து எரிபொருள் துறை தொடர்பில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள தீர்மானம்

விமானப் போக்குவரத்து எரிபொருள் துறை தொடர்பில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள தீர்மானம்

-

ஆஸ்திரேலியாவில் நீடித்த நிலைத்திருக்கக்கூடிய விமானப் போக்குவரத்து எரிபொருள் துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, 200 மில்லியன் டொலர் வரையிலான முதலீட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. Qantas, Airbus விமான நிறுவனங்கள் தங்களது பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களை முடுக்கிவிட முற்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிதி புதிய நிறுவனங்களுக்கும் வெற்றிகரமாகச் செயல்படும் நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய எரிபொருள் துறையின் ஆகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தவாறே முதலீடு செய்வது சிறந்த முடிவு என்று Qantas நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலன் ஜாய்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏனைய நிறுவனங்களும் உற்பத்தியாளர்களும் தங்களது பசுமையான எரிபொருள் திட்டங்களோடு முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார். 2050ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றாகக் குறைக்க உலகின் விமானத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய விமான எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அந்தக் கடப்பாட்டை நிலைநிறுத்த முடியும் என்று Airbus விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பங்காளித்துவம், ஐந்தாண்டுகளுக்கு மேல் நீடிக்கத் திட்டம் வரையப்பட்டுள்ளது.

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...