Sportsஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 30 வருடங்களின் பின்னர் இலங்கை அணி சாதனை!

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 30 வருடங்களின் பின்னர் இலங்கை அணி சாதனை!

-

ஆஸ்திரேலியா அணியுடனான 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

5 போட்டிகளை கொண்ட தொடரின் 4 ஆவது போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனது கன்னி சதத்தை பதிவு செய்த சரித் அசலங்க 110 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்படி, வெற்றி இலக்கான 259 என்ற ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தனஞ்ச டி சில்வா சாமிக்க கருணாரத்ன மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

30 வருடங்களில் பின்னர் இலங்கை மண்ணில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரை கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியர்கள் தினமும் பயன்படுத்தும் ஒரு மருந்து பற்றி எச்சரிக்கை.

Paracetamol மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளைப் பயன்படுத்திய பின்னர், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவசர சிகிச்சைப்...

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரும் Reddy Express

நாடு முழுவதும் உள்ள Reddy Express கடைகளில் ஷாப்பிங் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில், தொழில்நுட்பக் கோளாறால் சிலரிடம் 100 முறைக்கு...

Cryptocurrency மோசடிகளுடன் தொடர்புடைய ATMகள் மீது கடும் நடவடிக்கை

Cryptocurrency ATMகளுடன் தொடர்புடைய மோசடிகள் மூலம் மக்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலிய நிதிக் குற்றக் கண்காணிப்பு அமைப்பு நேற்று கடுமையான...

குயின்ஸ்லாந்தில் E-scooter விபத்துகளால் வாரத்திற்கு இரு குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி

குயின்ஸ்லாந்து மருத்துவமனை ஒன்று, வாரத்திற்கு இரண்டு குழந்தைகள் மின்-ஸ்கூட்டர் விபத்துக்களில் காயமடைவதாக தகவல் அளித்துள்ளது. இது பொது சுகாதார நிபுணர்களை பாதுகாப்பு விதிமுறைகளை அவசரமாக மாற்றியமைக்க அழைப்பு...

குயின்ஸ்லாந்தில் E-scooter விபத்துகளால் வாரத்திற்கு இரு குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி

குயின்ஸ்லாந்து மருத்துவமனை ஒன்று, வாரத்திற்கு இரண்டு குழந்தைகள் மின்-ஸ்கூட்டர் விபத்துக்களில் காயமடைவதாக தகவல் அளித்துள்ளது. இது பொது சுகாதார நிபுணர்களை பாதுகாப்பு விதிமுறைகளை அவசரமாக மாற்றியமைக்க அழைப்பு...

அவசர அழைப்பு சேவையை சீர்குலைத்ததற்காக Telstraவுக்கு அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வழங்குநர், 2024 ஆம் ஆண்டில் மென்பொருள் மேம்படுத்தலின் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவசர சேவையை வழங்கத் தவறிவிட்டார் என்று ACMA...