NewsTwitter-ல் மேலுமொரு வசதியை நீக்கப்போகும் எலான் மஸ்க்

Twitter-ல் மேலுமொரு வசதியை நீக்கப்போகும் எலான் மஸ்க்

-

எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ப்ளொக் செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது பயனர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு வாங்கிய எலான் மஸ்க் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை இஷ்டத்துக்கு மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் ப்ளூ டிக் வசதியை பெற சந்தா கட்டணத்தை அறிவித்தார். அண்மையில் ட்விட்டர் தளத்தின் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றி இருந்தார். சந்தா கட்டணம் செலுத்திய கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாயில் ஒரு பகுதியை வழங்கும் விதமாக விளம்பர வருவாய் பகிர்வு திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தார்.

அந்த வகையில் தற்போது இன்னொரு மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இனி எக்ஸ் பயனர்கள் தங்களுக்கு பிடிக்காத பயனர்களின் கணக்குகளை ப்ளொக் செய்ய முடியாது. அவர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளை மட்டுமே மியூட் செய்ய இயலும். அவர்களது பதிவுகள் நமது டைம்லைனில் வருவதை தடுக்க இயலாது. இது எக்ஸ் பயனர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது எக்ஸ் தளத்தில் இருக்கும் ப்ளொக்கிங் வசதியின் மூலம் பயனர்களின் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகள் இரண்டையுமே தடுக்க முடியும். இந்த வசதியை நீக்குவதால் பின்னூட்டங்களில் வரும் வசைச் சொற்களையும், ஆபாச தாக்குதல்களை தடுக்க முடியாமல் போய்விடும் என்று பயனர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கெனவே ப்ளொக் செய்யப்பட்ட பயனர்களின் கணக்குகளும் தானாகவே அன்ப்ளொக் ஆகுமா என்பது குறித்து இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, ப்ளொக்கிங் வசதியை நீக்குவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஏப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகியவற்றின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறுவதாக அமையும். இதனால் எக்ஸ் செயலி இந்த இரண்டு தளங்களில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் இரண்டிலும் பயனர்கள் எதிர்கொள்ளும் ஒன்லைன் தாக்குதல்களை ஃபில்டர் செய்யும் வசதிகளை செயலிகள் கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...