Newsகர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்!

கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்!

-

அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் திருட்டில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டத்தில அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஓஹியோ வெஸ்டர்வில்லில் உள்ள க்ரோகர் வணிக வளாகத்தில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட தாகியா யங் என்ற கர்ப்பிணி பெண் பொலிஸாரால் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது பிளெண்டன் டவுன்ஷிப் பொலிஸ் அதிகாரிகள் காரில் சாரதி இருக்கையில் அமர்ந்து இருந்த கர்ப்பிணியான தாகியா யங்-கை நெருங்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

அதில், தாகியா யங் நோக்கி பொலிஸார், “நீங்கள் வணிக வளாகத்தில் இருந்து பீர் பாட்டிலை திருடியதை ஊழியர்கள் கண்டுபிடித்து உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர், எனவே உடனடியாக காரில் இருந்து வெளியேறுங்கள்” என அறிவுறுத்துகின்றனர்.

அதற்கு, ”தான் எதையும் திருடவில்லை என்று பதிலளித்து காரின் பக்கவாட்டு கண்ணாடியை லேசாக திறந்து வைத்து கொண்டு பொலிஸாருடன் தாகியா யங் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

ஒரு கட்டத்தில் காரை முன் செலுத்த தாகியா யங் முயற்சிக்கவே காரின் முன் பக்கத்தில் நின்ற மற்றொரு பொலிஸ் அதிகாரி காரின் முன் கண்ணாடியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் தாகியா யங் காயமடைய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கட்டிடத்தின் சுவரில் இடித்து நின்றது. உடனடியாக அவசர உதவிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்து, சம்பவ இடத்தில் இருந்து காயமடைந்த தாகியா யங்-கை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக தாகியா யங் மருத்துவமனையில் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதங்கள் தொடர்ந்து சரிவதற்கான காரணங்கள்

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகையைப் பராமரிக்க போதுமான குழந்தைகள் இல்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2021 க்கு இடையில் 50–54 வயதுடைய குழந்தை இல்லாத பெண்களின்...

புதுமை பெறுகிறது விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் அதிகரித்து வரும் குற்ற விகிதத்தை எதிர்த்துப் போராட விக்டோரியா காவல்துறை புதிய திட்டங்களையும் நடவடிக்கைகளையும் முன்மொழிந்துள்ளது. விக்டோரியா காவல்துறை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றங்களைச்...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கார் திருட்டுகள் – கடுமையாகும் சட்டங்கள்

விக்டோரியாவில் கார் திருட்டு விகிதம் இந்த ஆண்டு 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காப்பீட்டு முகவர்கள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும் ஒரு கார் திருட்டு...

ஆன்லைனில் கசிந்த அல்பானீஸ், டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ், எதிர்க்கட்சித் தலைவர் சூசன் லே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. ஒரு...

மலேசியாவில் குழந்தைகள் மத்தியில் பரவும் நோய்

மலேசியாவில் வேகமாக பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா (influenza) தொற்றுநோய் காரணமாக 6000 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கடந்த வாரத்தில் 97...

விர்ஜின் ஆஸ்திரேலியா பயணிகளுக்கான புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிறுவனமான விர்ஜின் ஆஸ்திரேலியா, பயணிகளுக்கான புதிய சாமான்கள் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, Economy வகுப்பு பயணிகள் அதிக சாமான்களை எடுத்துச் செல்ல முடியும்,...