Newsகர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்!

கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்!

-

அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் திருட்டில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டத்தில அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஓஹியோ வெஸ்டர்வில்லில் உள்ள க்ரோகர் வணிக வளாகத்தில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட தாகியா யங் என்ற கர்ப்பிணி பெண் பொலிஸாரால் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது பிளெண்டன் டவுன்ஷிப் பொலிஸ் அதிகாரிகள் காரில் சாரதி இருக்கையில் அமர்ந்து இருந்த கர்ப்பிணியான தாகியா யங்-கை நெருங்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

அதில், தாகியா யங் நோக்கி பொலிஸார், “நீங்கள் வணிக வளாகத்தில் இருந்து பீர் பாட்டிலை திருடியதை ஊழியர்கள் கண்டுபிடித்து உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர், எனவே உடனடியாக காரில் இருந்து வெளியேறுங்கள்” என அறிவுறுத்துகின்றனர்.

அதற்கு, ”தான் எதையும் திருடவில்லை என்று பதிலளித்து காரின் பக்கவாட்டு கண்ணாடியை லேசாக திறந்து வைத்து கொண்டு பொலிஸாருடன் தாகியா யங் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

ஒரு கட்டத்தில் காரை முன் செலுத்த தாகியா யங் முயற்சிக்கவே காரின் முன் பக்கத்தில் நின்ற மற்றொரு பொலிஸ் அதிகாரி காரின் முன் கண்ணாடியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் தாகியா யங் காயமடைய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கட்டிடத்தின் சுவரில் இடித்து நின்றது. உடனடியாக அவசர உதவிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்து, சம்பவ இடத்தில் இருந்து காயமடைந்த தாகியா யங்-கை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக தாகியா யங் மருத்துவமனையில் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

மெல்பேர்ணில் இரண்டு வீடுகளின் விலைக்கு ஒரு கிராமத்தை வாங்கலாம்!

மெல்பேர்ணில் உள்ள இரண்டு வீடுகளின் விலைக்கு ஒரு முழு கிராமத்தையும் வழங்கும் ஒரு தனித்துவமான சொத்து ஒப்பந்தம் Mount Dandenong-இல் நடைபெறுகிறது. மெல்பேர்ணுக்கு கிழக்கே அமைந்துள்ள ஒரு...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...