Cinemaபிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து காலமானார்

பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து காலமானார்

-

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து ‘எதிர் நீச்சல்’ என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார்.

இதில் இவர் பேசும் ‘அட எம்மா ஏய்’ வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது.

இவர் இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ‘கண்ணும் கண்ணும்’ 2014-ஆம் ஆண்டு ‘புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம்’ செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். அதாவது, ‘எதிர் நீச்சல்’ தொடரின் டப்பிங் பேசிக்கொண்டிருந்த திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மாரிமுத்துவின் உடல் இன்று மாலை வரை சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று இரவு அவரது சொந்த ஊரான மதுரை, தேனி மாவட்டம் வருச நாட்டுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு இவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவில் அறிமுகமாகும் புதிய வேலை வாய்ப்புகள்

விக்டோரியா மாநிலத்தில் 10 ஆண்டுகளில் 8 லட்சம் புதிய வீடுகள் கட்டுவது தொடர்பான வணிகத்திற்கான புதிய ஆட்சேர்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விக்டோரியா மாகாணத்தில் நிலவும் வீட்டு நெருக்கடிக்கு...

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்ள இன்னொரு நிவாரணம்

குழந்தை பிறக்கும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு மற்றும் மருத்துவ சேவைக்காக நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் பில்லியன் டாலர்கள் பெறப்படும்...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் புதிய சட்டம்

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடைசெய்யும் திட்டத்தை ஏற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடைசெய்யும் ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற முதல் சட்டத்தை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும்...