Sportsஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தங்க நுழைவுச் சீட்டு விநியோகம் ஆரம்பம்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தங்க நுழைவுச் சீட்டு விநியோகம் ஆரம்பம்

-

2023 ஆம் ஆண்டின் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் 5 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட்டிற்கு தங்க நுழைவுச்சீட்டு என்ற ஒரு திட்டத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பிரபலங்களுக்கு இந்த தங்க நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் விஐபி அந்தஸ்தில் அமர்ந்து பார்க்க முடியும், இதற்காக அவர்கள் எந்த பணத்தையும் செலவிடத் தேவையில்லை.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு முதல் தங்க நுழைவுச்சீட்டை வழங்கினார்.

இதேவேளை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் இந்த தங்க நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு நுழைவுச் சீட்டுக்காக ரசிகர்கள் அலையும்போது பிரபலங்களுக்கு இவ்வாறு இலவச நுழைவுச் சீட்டுகள் தேவைதானா என்று அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...